Wednesday 20 May 2015

மனுசங்களே
உங்கஏமாத்துவேல
எனக்குத்தெரியாதா....
வயல்லரெண்டுபேரும்தான
ஒன்னாஒழைச்சோம்
நீ நெல்லஎடுத்துகிட்டு
எனக்கு வைக்கோலக்குடுதீங்க
திரும்ப நெல்ல அரைச்சி
அரிசியநீங்கஎடுத்துட்டு
உமியஎனக்குக்குடுத்துட்டீங்க
திரும்பசாதம் வடிச்சு 
சோத்தை நீங்கஎடுத்துகிட்டு
கஞ்சிய எனக்கு குடுத்தீங்க
ஆனா கடைசில
நீங்கதான் ஏமாந்தீங்க
உங்களுக்கு சுகரு பிரஸ்ஸரு
கிடச்சது பரிசா
எனக்கு அதுகிடைக்கல
ஆரோக்கியம் கிடைச்சது
அந்தபால்லயும் பங்குக்கு
வந்துட்டீங்க...
இந்தமுறைநான் ஏமாறல
கன்னுக்கு ஒதுக்கிட்டுதான்
ஒங்களுக்கே பால்குடுத்தேன்....
அதை உறிஞ்சவும் மிசின்
கொண்டுவந்துட்டீங்களே
நல்லவங்களே,,,,,,,,,,,,

No comments:

Post a Comment