Friday 8 May 2015

உன் பாதக்கமலத்தில்
விழுந்துகிடந்தேன்
நான்கதறி அழ அழ
சமாதானம் சொல்லியடி
என்னைகுளிப்பாட்டினாய்
மூக்கில் நூல் விட்டு
தும்மவைத்து
என் அஸ்டகோனல்
முகஅழகைரசித்தாய்
முந்தானையால் 
தலைதுவட்டி
குளிருக்கு உன்னைப்
போர்த்திக்கொண்டாய்
பசித்தஎனக்கு 
அமுதூட்டினாய்
செமிக்காமல் நான் 
வாயிலெடுத்தால் 
துடைத்துவிட்டாய்
கையில் தாங்கிக்கொண்டாய்
கண்ட இடத்தில் நான்
அசிங்கம் செய்தாலும்
முகம் சுழிக்காது
என்னையும் சுத்தப்படுத்தினாய்
இரவுகளில் விழித்திருந்தாய்
எனக்காக விரதமிருந்தாய்
திருமணமானதும்
உன் இடத்தை 
விட்டுக்கொடுத்தாய்
உன் துயரங்களை 
மூடிமறைத்தாய் முந்தானையால்
எனக்கொருவரம்கொடுதாயே
அடுத்தஜென்மத்தில்
உனக்கு அம்மாவாக........
Like · Comment · 

No comments:

Post a Comment