Friday 8 May 2015

வறீங்களா எல்லாரும்
டியான் டியான் டோய்
வெளயாடலாம்
என்னதான் ஆயிரம் வெளயாட்டு
இருந்தாலும் 
இதுல இருக்குற சஸ்பென்ஸ்
எந்தவெளயாட்டுலயும் இருக்காது
சாயந்தரம் 
ஆறுமணிக்குமேலதான்
கலகட்டும் 
அந்த இருட்டுல
பேய்மாதிரி அலஞ்சு
பிசாசுமாதிரி தேடி
அலையும்போது 
மனசு திக் திக் நு
இருக்கும் ஒருபக்கம்
எவ எங்கஒளிஞ்சிருக்காளோ
மறுபக்கம் உண்மையாவே
பேய் எங்கயாவது
இருந்திறபோகுதோன்னு
வயத்தக் கலக்கும்
தனியா இருட்டுலதேடுறப்போ
திடீர் நு பே ந்னு எல்லாம் சேர்ந்து
கத்துங்க பாரு
உசுரு போய் திரும்ப வரும்
வெளயாட்ட முடிக்கவே 
மனசுவராது
பசியே எடுக்காது
இங்கேயே இருக்காலாம்னுதோனும்
ஏந்தெரியுமா...
வீட்டுக்குப்போனா பசியெடுக்குமே
வீட்டுல ஒன்னுமிருக்காதே,,,,,,,,
Like · Comment · 

No comments:

Post a Comment