Wednesday 20 May 2015

பட்டணத்துலதான்
போவாக காலங்காத்தால
நடந்து 4மைலு 
பிரஸருக்கும் சுகருக்கும்
பயந்து,,,,,,,,
நமக்குநேரமில்ல
கழனிலவேலைக்கே
நேரம்போதல
நடந்துபோனா
வேலகெட்டுப்போய்டும்
அங்கபோய் நாலுஏக்கர்ல
வரப்புவெட்டினா
சாயந்தரம் வரசரியாஇருக்கும்
எனக்கு கஞ்சித்தண்ணீபோதும்
காலையில குடிக்க
காப்பித்தண்ணில
சக்கரபோடமாட்டாகபட்டணத்துலனு 
சொன்னாக
நிசமாவா ஏன் அப்புடி
குடிக்கனும்....
என்னயமாதிரி குடிச்சிட்டு
வேலைக்குபோக
வேண்டியதுதான...........

No comments:

Post a Comment