Friday 8 May 2015

தாத்தா தாத்தா...
ஒரு சந்தேகம்!
நீஎன்னைய
மாதிரி கொழந்தையா
இருந்தப்போ
உன்னைய யாரு
பாத்துக்கிட்டா?
உங்கதாத்தாபாட்டியா?
இல்லையா?
உங்க அம்மாஅப்பாதான்
பாத்துகிட்டாங்களா?
அப்புறம் என்னையமட்டும்
ஏன் எங்க அம்மா அப்பா
பாக்கமாட்டீன்றாங்க?
நான் அழகா இல்லயா?
என்ன அவங்களுக்குப்
புடிக்கலயா,,,,,?
உங்களுக்கு மட்டும் எப்படி
என்ன புடிக்குது?
அம்மா அப்பா ரெண்டுபேரும்
வேலையில் இருந்து வந்தவுடன்
சண்டைபோடவே நேரம் பத்தல
நீயும் பாட்டியும் ஏன் சண்டை
போடுறதில்ல?
என்கூட ஏன் அம்மா அப்பா
சண்டைகூட போடமாட்டேன்றாங்க?
என்கூட தூங்கமாட்டேன்றாங்க?
உங்க மகன் தானே எங்கப்பா
ஏன் உங்களைப்போலில்ல....?
நான் எப்படி ஆவேன் 
உங்களைமாதிரியா
இல்ல அப்பாமாதிரியா?
நீங்க எதுத்தவீட்டு தாத்தா
ஐஸ்பொட்டிலபோனவரு
திரும்ப வரல,,,நீங்க
அதுமாதிரிபோய்டுவீங்களா?
போய்ட்டா என்ன யாருபாத்துப்பாங்க?
என்ன உன்கூட வரவிடமாட்டாங்களா?
Like · Comment · 

No comments:

Post a Comment