Saturday 5 June 2021


பாழுங்கிணறு)
அந்தப்பொண்ணு அவன அவங்க ஊருத்திருவிழாவில பாத்தா, ஒல்லியா கருப்பா வெடவெடன்னு காதுல ஒத்தக்கடுக்கன் போட்டுக்கிட்டு அருமையா டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தான் அவனோட டான்ஸ் அத்தனபேரையும் கைதட்ட வச்சிச்சி. மூணுபாட்டுக்கு ஆடுனாலும் நெனப்புல நின்னுடுச்சு.
அதுக்கப்புறம் அவன் டான்ஸாடுற எடத்துக்கெல்லாம் அவபோனா இத அவனும் பாத்துட்டான் ஒருநாள் டான்சாடும்போது காதலச்சொல்லுறமாதிரி பாட்டும் செலக்ட் பண்ணிஅவளையே பாத்துக்கிட்டு ஆடுனான் காத்துல பறக்கும் முத்தமும் குடுத்தான் . அவளுக்கு ஒருமாதிரியாயிருச்சு. அவளுக்குப்புரிஞ்சி போச்சு அவளஅவனுக்குப்புடிச்சிருக்குன்னு அன்னிக்கே அவளோட செல் நம்பல மெசேஜ் அனுப்புனான் . அவ ஒடனே பதில் குடுக்கல அவளுக்கும் அது புடிச்சிருந்துச்சி ஆனாலும் ஆறப்போட்டா.
அன்னிக்கி ச்சாயங்காலம் அவ வார வழில நின்னுக்கிட்டு இருந்தான் அவ பக்கத்துல வந்ததும் ஒருசின்ன டான்ஸ் மூவ்மெண்டு போட்டு குனிஞ்சி ரோஜாப்பூவக்குடுத்து நான் உன் அழகுக்கு அடிமைன்னான்
அவ சிரிச்சா. அவனும் சிரிச்சான் . அதுக்கப்புறம் அவங்க ரெண்டுபேரோட செல்போனும் பிசியாயிடுச்சு. மாத்திமாத்தி மெசேஜ் பேச்சுன்னு போச்சு. அன்னிக்கி அவன் அவள பக்க்த்து ஊர்ல இருக்குற மாலுக்கு சினிமாவுக்குக்கூப்புட்டான் பிரண்டுக்கு ம் சேத்து டிக்கெட் புக் பண்ணுனதாகவும் அவன் வராததால
வேஸ்ட்டாத்தான் போகுறதாவும் விரும்புனா நீ வரலாமுன்னு சொன்னான்
அவளுக்கும் ஆசதான் சரின்னா. சொல்லுற எடத்துல வந்து நில்லு நான் பைக்கில வாறேன்னு சொன்னான். இவளும்போய் நின்னா. அவன் வந்ததும் பைக்கில ஏறச்சொன்னான் அந்த பைக்கில அவன் மேல சாயாம ஒக்காறமுடியாது. அப்ப அவன் சொன்னான் பயப்படாத முகத்த துப்பட்டாவுல மூடிக்கன்னான். சரின்னு ஏறிக்கிட்டா. சினிமாவுக்குப்போனாக
அது படமே கொஞ்சம் சுமாருதான் கூட்டமே இல்ல படத்துல வார பாட்டுக்கெல்லாம் நடுவுல போய் டான்சாடினான். பாத்தவுக கைகுடுத்தாக.படம் பாத்துக்கிட்டு இருக்கும்போது அவன் கை அங்க அங்க தெரியாதமாதிரி பட்டது சாரி சாரின்னு சொன்னான். இவளுக்கு ஒரு மாதிரி யாய்டுச்சு . படம் விட்டு வீட்டுக்கு பைக்கில வாரப்ப இவளே கொஞ்சம் நெருங்கி யிருந்தா. ஆனா அவன் வெல்குறமாதிரி பாவலாப்பண்ணினான்.
அப்புறம் ரெண்டுநாளு கண்டுக்கவே இல்ல மெசேஜ் அனுப்புனாலும் பதில இல்ல மூணாவது நாள் அவனே கால்பண்ணுனான்
சின்ன ஆக்சிடென்ட் ஆயிருச்சு ஆஸ்பத்திரில இருக்கேன்னான் இவளுக்கு பதட்டமாப்போச்சு. அடிச்சி புடிச்சி அந்த ஆசுப்பத்திரிக்கிப்போனா. அங்க வாசல்ல தலையில கட்டோட நின்னான். இப்பத்தான் டிஸ்ச்சார்ஜ் ஆனேன்னான். அவளுக்கு கண்ணீர்தளும்புச்சி,டக்குன்னு கட்டிப்புடிச்சி தேங்ஸ்ன்னான். இவளுக்கு ஒரு மாதிரி ஆயிப்போச்சு. அப்ப அவனோட பிரண்டு ஒருத்தன் பைக்கில வந்தான்
சாரி சிஸ்ட்டர் ஆசுப்பத்திரில உங்க பேரத்தான் மயக்கத்தில கூட சொல்லிக்கிட்டு இருந்தான் நான் இவளுக்கு ஜிவ்வுன்னு ஆகிப்போச்சு, அம்புட்டு உசுறாடா என்மேலன்னான். அதுக்கு இவன் பிரண்டுசொன்னான் ஒங்க பேரகையில பச்சகுத்திருக்கான் பாருங்கன்னு சொல்லும்போது அவன் அதெல்லாம் ஏண்டா அவங்ககிட்ட சொல்றன்னான்
இவளுக்கு கண்ணு கலங்கிடுச்சு வா மச்சான் ஒண்ண வீட்டுல கொண்டுபோய் விடுறேன்னான். அதுக்கு அவன் சொன்னான் அப்புறம் இவங்க தனியா எப்புடிப்போவாங்க நாங்க நடந்தே வாறோமுன்னான். அதுக்கு பிரண்டு சொன்னான் சிஸ்ட்டர நீ வண்டில கூட்டிட்டுப்போ என் வீடு பக்கம் தான் நடந்தே போய்டுவேன் சாயங்காலமா வந்து வண்டிய எடுத்துக்கிறேன்னான்
இப்ப வண்டில போகும்போது அவன் கைல அவ முத்தம் கொடுத்தா. அப்ப அவகேட்டா நாளைக்கிப்படத்துக்குப்போகலாமான்னு
அவன் சொன்னான். சாரி எனக்கு முக்கியமான வேலையிருக்கு ஒரு பிரண்டோட அம்மாவுக்கு ரத்தம் குடுக்கனும் நான். இரத்ததானமெல்லாம் செய்வியான்னா. அவன் பத்துவாட்டி குடுத்துருக்கேன்னான். அப்பசரி அடுத்தநாள் போகலாமுன்னான்
ஆனா அடுத்தநாளு அவனே போன் பண்ணினான் . அவங்களுக்கு ரத்தம் தேவப்படல. அதுனால சும்மாதானி ருக்கேன் . படத்துக்கு போகலாமான்னான்
இவளுக்கு சந்தோசம். படத்துக்குப் போனாக . ஆனா இந்தத்தடவ மூலையில சீட் புக் பண்ணியிருந்தான்.படம் ஆரம்பிச்சவுடன் அவ கையப்புடிச்சி சாரிடா உன்கிட்டப்பொய்சொல்லிட்டேன் உன் கூட இருக்கனும்ற ஆசையில என் பிரண்ட ரத்ததானத்துக்கு அனுப்பிச்சிட்டேன் மன்னிச்சிருன்னு கண்ணுகலங்கச்சொன்னான் அவ பரவாயில்ல அம்புட்டு ஆசையாடான்னு அவன் கைல முத்தம் கொடுத்தா. அதுக்கபுறம் அன்னிக்கி அவங்க படத்த ஒழுங்காப்பாக்கல...
வீட்டுக்குவந்து யோசனபண்ணிப்பாத்தா. அவன் நம்மமேல எம்புட்டு ஆசையா இருக்கான்னு ஒடனே மெசேஜ் அனுப்புனா தேங்ஸ் எல்லாத்துக்கும்ன்னு
அதுக்கப்புறம் நடக்கப்போற விசயங்கள் அவ வாழ்க்கைய மாத்தப்போவது தெரியாமலே
( மீதி நாளை பேசுவோம்)
(பாழுங்கிணறு)தொடர்கிறது... அவனும் அவளும் காதல் வசப்பட்டு அடிக்கடி சந்திக்கிறாங்க......தொடர்கிறது
இப்ப அவளோட அப்பாவ ஒருத்தர் பாத்துட்டுச் சொன்னாரு. ஒம்பொண்ணு ஒருத்தன் கூட ஊரு சுத்துது. அவன் ஒரு வெட்டிப்பய. ஊர்மேயிறவன் பாத்துக்கன்னான். அதகேட்டு அவருக்கு மனசு பதட்டமாயிடுச்சு. அன்னிக்கி ராத்திரி மகளக்கூப்புட்டு விசாரிச்சாரு கேள்விப்பட்டது உண்மையான்னு. அவ அத மறுக்கல. ஆமாப்பா அவன எனக்குப் புடிச்சிருக்கு. எப்புடினாலும் யாருக்காவது கலியாணம் பண்ணி வைக்கபோறீங்க எனக்குப்புடிச்சவனை பண்ணி வைச்சா எனக்கு சந்தோசமா இருக்கும்ன்னா
அதுக்கு அவங்க அப்பா அவன் வெறும்பயலா இருக்கான் வேல வெட்டியில்ல ஒன்னவைச்சிக் காப்பாத்தனு மேம்மான்னாரு. இப்ப அவனுக்கு வேலையில்ல நான் சம்பாதிக்கிறேனில்ல அவன வைச்சிக்காத்துறேன் . அப்புறமா அவன் வேலைக்கிபோய்டுவான் எல்லாம் சரியாயிடும்ன்னா. அம்மா நான் கேள்விப்பட்டவரைக்கும் அவன் சரியில்லாதவன்னு சொல்றாகளே ம்மான்னாரு. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல என் மேல அவன் உசிற வைச்சிருக்கான். என்ன எப்புடியும் காப்பாத்துவான்னா. எனக்குத்தெரிஞ்சதை விட ஒனக்கு அதிகம் தெரியுமா உனக்கு வயசு அப்புடி எதையும் யோசிக்கத் தோணாதுன்னாரு. அவ நான் படிச்சவ என்னோட வாழ்க்கைய அமைச்சிக்க எனக்குத்தெரியும்ன்னா. அவருக்கு கோவம் வந்துருச்சு. அப்ப இவ்வளவுநாளு உனக்காக நான் பட்டதெல்லாம் நெனைக்க மாட்டியான்னாரு.அவசொன்னா அது வேற இதுவேறன்னா
. அவருக்குக்கோவம் தாங்கமுடியல. சொல்றதக்கேப்பியா மாட்டியான்னாரு. சான்ஸே இல்லன்னா அவருக்கு கோவமும் அழுகையும் வந்துடுச்சு. கைல கெடச்சதை எடுத்து சாத்து சாத்துன்னு சாத்திப்புட்டாரு அவளோட அம்மா அவரத்தடுத்துச்சு வயசுக்கு வந்த புள்ளைய கைநீட்டாதீகன்னு அவரு கேக்கல தடுத்த அவளுக்கும் அடிவிழுந்துச்சு
அவ அழுகவேயில்ல. கண்ணீர்கூட வரவேயில்ல. அது அவருகோவத்தை அதிகமாக்குச்சு. அப்புடி நீ போனா என் பொணத்தத்தான் பாப்பன்னாரு
அவளும் கோவத்துல சொல்லிட்டா அப்பச்சந்தோசமா சிரிப்பேன்னு
அதைக்கேட்டதும் அவரு சாக்காயிட்டாரு
நாம பெத்து20வருசம் வளத்தமகளா இப்புடிப்பேசுறதுன்னு அவரால தாங்க முடியல. இதுவரைஅவளோட அம்மாவுக்கு இப்ப தாங்க முடியல என்ன பேச்சு பேசுற நீ
நீயெல்லாம் படிச்சபொண்ணான்னு அழுக ஆரம்பிச்சிட்டா. இவ ஒண்ணும் பேசல
எல்லாரும் அவுக அவுக லிமிட்டோட இருந்தா நல்லதுன்னு சொல்லிட்டுப்போயி ரூமச்சாத்திக்கிட்டா,
இத அவரு எதிரபாக்கல நம்ம மகளா இது
என் பொணத்தப்பாத்தா சந்தோசமா சிரிப்பாளான்னு சொல்லிக்கிட்டே அழுதாரு
அவரோட சம்சாரம் சொல்லிச்சி அந்தப்புள்ள எதோ கோவத்துல சொல்லிருக்கும் விட்டுங்க இதப்பெருசா எடுத்துக்காதீங்கன்னா. அன அவரால
தாங்க முடியல சட்டைய எடுத்து மாட்டிக்கிட்டு வெளிய கெளம்புனாரு
அந்தம்மா கேட்டுச்சு எங்கபோறீங்கன்னு
அவரு வெளிய போய்ட்டு வாறேன்னு. சொல்லிட்டுப்போயிட்டாரு
மகளைக்கூப்புட்டா அம்மாக்காரி அவரு எதோ கோவத்துல போறாரேம்மா வெளிய வாம்மான்னு அவரூமு கதவத்தட்டினா
அவ தொறக்கல அம்மாகாரிக்கு ஒண்ணும் புரியல ஒடஞ்சிபோயி ஒக்காந்துட்டா.
கொஞ்சநேரத்துல மக வெளிய வந்தா
அம்மாகாரி சொன்னா ஏம்மா இப்புடிப்பேசலாமா பெத்த அப்பாவன்னா
அதுக்கு மக சொன்னா . இந்தப்பெருசுக இப்புடித்தான் சின்ன புள்ளக என்ன செஞ்சாலும் புடிக்காது ஏன் தான் இப்புடி உசுறவாங்குதுகளோன்னா. அம்மாவால பொறுத்துக்க முடியல ஏண்டி ஒனக்கு அப்பான்னா எளக்காரமாப்போச்சா என்னபாடுபட்டு ஒன்ன வளத்தாரு ராப்பகலா தூங்காம சம்பாரிச்சாரு எல்லாம் ஒனக்காகத்தாண்டி இப்ப தூக்கி எறிஞ்சு பேசுறன்னா அதுக்கு மக சொன்னாஅவன் எனக்காக உசுறயே விடுவான் அப்புடி ஒருத்தன் நீங்க எங்கதேடினாலும் கெடைக்கமாட்டான் அது புடிக்கலன்னா நான் கவலப்படாம போயிட்டே இருப்பேன்னா. சொல்லிட்டு ஒரு பையத்தூக்கிட்டுக்கெளம்பிட்டா
நேர அவனுக்குப்போன் போட்டா நாம இப்பவே கல்யாணம் பண்ணுறோம்
இந்த புத்திகெட்ட ஆளுகளுக்கு பாடம் புகட்டுறோமுன்னா. அவன் சொன்னான் அவசரப்படாத அதுக்கு சில ஏற்பாடெல்லாம் ப்ண்ணனும் ந்னான் அதெல்லாம் முடியாது இனிமே ஒரு நிமிசம் கூட என்னால எங்கவீட்டுல இருக்கமுடியாதுன்னா. கொஞ்சநேரத்துல அவன் கிட்ட இருந்து போன் வந்துச்சு
சரி ஏற்பாடெல்லாம் பண்ணிட்டேன் சொல்ற எடத்துக்கு வான்னான். இவளும் போனா அங்க அவனும் அவன் பிரண்டுமிருந்தாக. வெளியூர்ல போய் கலியாணம் பண்ணிக்கலாம் என் பிரண்டு பக்கத்து ஸ்டேட்டுல இருக்கான் அவன் எல்லாம் பாத்துக்கிறேன்ன்னு சொல்லிருக்கான்னான் அன்னிக்கி ராத்திரியே அங்க போய் சேந்தாக
அங்க அவன் சொன்னான் வெளிய போயி கலியாணம் பண்ணமுடியாது நாங்க சாட்சி வீட்டுக்குள்ளயே சாமிமுன்னாடி கலியாணம் பண்ணிக்குவோம் அப்புறம் பேப்பர் எல்லாம் ரெடிபண்ணிட்டு ரெஜிஸ்ட்டர் பண்ணிடலாம்ன்னான்
அதுமாதிரியே கலியாணம் நடந்துச்சு அவளுக்கு ரொம்ப சந்தோசம் . அப்பாவ ஜெயிச்சிட்டோமுன்னு. நேர போனப்பொட்டு அப்பாகிட்ட சொன்னா சிரிப்போட எங்க கலியாணம் நான் சொன்னமாதிரி முடிஞ்சிருச்சு இப்ப என்ன பண்ணுவீங்கன்னா. அவரு அழுதாரு
அவரால பேசமுடியல. அவளோட அம்மா போன வாங்கிச்சொன்னா நீயெல்லாம் எப்புடி வந்து எங்களுக்குப்பொறந்தியோ இன்மே மூஞ்சிலயே முழிக்காதன்னு அழுதுக்கிட்டே சொன்னா அதுக்கு இவ சொன்னா போதும் சீனப்போடாதன்னா
அம்மாவால அழுகைய அடக்கமுடியல
கலியாணம் முடிஞ்சி மூணுநாளாச்சு எல்லாம் முடிஞ்சது வாழ்க்கையோட சந்தோசத்தின் உச்சில இருந்தா அவ
இப்ப அவன் சொன்னான் காசு தீந்துபோச்சு ஊருக்குப்போய்மீதியப்பாத்துக்கலாமுன்னான். சரின்னு திரும்ப ஊருக்கு வந்தாக
ஊரு வந்து சேந்ததும் அவன் வீட்டுக்குப்போனாக. அவங்க அப்பா அவன வீட்டுக்குள்ள சேக்கல. திட்டி வீட்டுக்குள்ள நொழையாதன்னுட்டாரு இப்ப அவன் சொன்னான் நாம வாடகைக்கு வீடுபாப்போம் அதுக்குக்காசு வேணும் நீதான் ஏற்பாடு பண்ணனும்ன்னான். அவ நகையெல்லாம் கழட்டிக்குடுத்தா வீடுபாத்துக்குடியேறினாக. அப்ப தச்செயலாக்கேட்டா ஆமா என் பெயரைபச்சகுத்துனியே அங்க என்னகூட்டிட்டுப்போ உன் பெயரை என் கைல பச்ச குத்தனும் எங்க காமி அதுல முத்தம் குடுப்பேன்னா. அவன் தெல்லாம் இப்ப எதுக்குன்னான். சரி உன்கையக்காமின்னா. அவன் முடியாதுன்னான் வலுக்கட்டாயமாக் கைய்யதிருப்புனா அவன் ஓங்கி ஒரு அறைவிட்டான். முடியாதுன்றேன் என்ன பிடிவாதம்ன்னான். இவ அதிர்ச்சில நின்னா
அவன் சொன்னான் அது பச்ச மைல வெளயாட்டுக்கு எழுதிக்காமிச்சேன் பச்சயெல்லாம் குத்தலன்னான். அவளால அழுகைய அடக்கமுடியல அவன் ஒடனே வெளிய கெளம்பிப்பிப்போனான்
திரும்ப வரும்போது குடிச்சிருந்தான் வந்து அவகிட்ட சாரி டியர் ஒன்ன அடிச்ச சோகம் தாங்கமுடியல் அதான்னான். அதுக்கு அவ கேட்டா நீ குடிப்பியான்னு அவன் சொன்னான் அப்ப அப்பன்னான்
அதுக்கப்புறம் தெனம் குடிச்சிட்டு வந்தான் காசுகேட்டான் குடுக்காட்டினா அவளப்போட்டுச்சாத்தினான். இருந்தகாசெல்லாம் தீந்துபோச்சு ஒருநாள் பூராம் அவன் வரவேயில்ல. மறுநாள் வந்தான் எங்கபோனன்னு கேட்டதுக்கு என் வீட்டுக்குப்போனேன்னான்.உன் கூட என்னால பட்டிணி கெடக்க முடியாது ன்னான்
நீவேனா ஒங்க வீட்டுக்குக்குப்போய்க்கோ ரெண்டுபேரும் கலியாணம் ஆனத மறந்துடலாம்ன்னான் எங்கவீட்டுல எனக்கு வேறபொண்ணு பாத்துட்டாகன்னான்
அவளுக்கு கோவமும் அழுகையும் பொத்துக்கிட்டு வந்துச்சு. என்ன சொன்ன எல்லாத்தையும் மறந்துடலாம்ன்னா
ஒனக்கு வெளையாட்டாப்போச்சா என் அம்மா அப்பா குடும்பம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருக்கேன் லேசாசொல்லுற மறந்துடலாமுன்னுனு சொல்லிட்டு நீ ஒரு மனுசனான்னு துப்புனா . ஆம்பளை என்மேல துப்புறீயான்னு அடிக்கவந்தான் இப்ப அவ சும்மா இல்ல அவளும் அடிச்சா
மாத்தி மாத்தி அடிச்சிக்கிட்டாக அப்ப அவன் சொன்னான் வீட்டவிட்டு வெளியபோடிநாயேன்னான்
அவளால தாங்க முடியல ஓன்னு அழுதா
அப்ப அவன் பாட்டில எடுத்துக்குடிச்சான்
இங்க ஒப்பாறிவைக்கிறவேலையெல்லாம் வைச்சிக்காத ஒழுங்கா கெளம்புன்னான்
இப்ப அவளுக்கு அப்பா சொன்னது ஞாவகம் வந்துச்சு. அப்பாவை நோகடடிச்சது ஞாவகம் வந்துச்சு
என்ன பண்ணுறதுன்னு தெரியல அவன் கெளம்பிப்போயிட்டான். அன்னிக்கிப்பூறாம் அழுதுக்கிட்டே கெடந்தா . மனசத்தேத்திக்கிட்டு வீட்டுக்குப்போன் போட்டா அம்மாதான் எடுத்துச்சு. ஒண்ணுமே பேசல ஓண்ணு அழுதா என்ன மன்னிச்சிடும்மா என்ன மன்னிச்சிடும்மான்னு கதறுனா அவளோட அம்மாவும் அழுதா அவளுக்கு விசயம் தெரிஞ்சிபோச்சு இவ ஏமாந்துட்டான்னு
கொஞ்சநேரத்துல அவளோட அப்பா வந்தாரு. அவரப்பாத்ததும் தாங்க முடியாம அழுதா. அப்பா ஒங்ககிட்ட் மன்னிப்புக்கேக்குற அருகதைகூட எனக்கில்ல. பாவிப்பாநான்ன்னு அழுதா அவரும் அழுதாரு அம்மா சின்னபுள்ளையாயிருக்கயில எத்தன மொற உன் பிஞ்சுகாலால ஒதச்சிருக்க அதுக்காக கோவிக்கமுடியுமாம்மா கவலைப்படாத நான் மறந்துட்டேன்னாரு
அவன்கிட்டப்பேசி அவன சரிபண்ணி நான் கூட்டிட்டு வாறேம்மா ன்னாரு. அதுக்கு அவ சொன்னா அவன் அதுக்கு தகுதியில்லாதன்ப்பா. வாங்க நம்ம வீட்டுக்குப்போகலாம் நானினிமே ஒங்க கூடவே இருந்துடுறேன்... ஒங்களுக்க்காகவே இருப்பேன் என்ன மன்னிச்சிடுங்கன்னா. ரெண்டுபேரு கண்ணுல இருந்தும் கண்ணீர் வழிஞ்சது அப்பயும் அவர் சொன்னாரு அவன் கால்ல வுழுந்தாவது கூட்டிட்டு வாறேன்னாரு
அப்ப சொன்னா என்ன அந்தப்பாழுங்கெணத்துல இன்னொரு முறை தள்ளாதீங்கப்பா ஒருதடவை கண்ணமூடிட்டுப்போய் விழுந்தேன் அதுவே கடைசிமொறயாகவும் இருக்கட்டும்பா என்ன வற்புறுத்தாதீங்கன்னாமகளோட நெலமையப்பாத்துஅவர் கண்ணுல கண்ணீர் தார தாரயா ஊத்துச்சு..ஆனா அவகண்ணுல நின்னுடுச்சு கண்ணீர்.......
கவிச்சிகரம் .முத்துவிஜயன்