Friday 27 September 2013


உள்ளத்தில் நெருக்கம்
உணர்வுகளின் பெருக்கம்
கொள்வதும் இனிக்கும்
கொடுப்பதும் பிடிக்கும்
மனதில் கிறக்கம்
மயங்கவைக்கும்
மாலை வந்தால்
மனம் தேடத்தொடங்கும்


சுவாசிக்கும் சுகந்தம் தந்து 

நேசிக்கும் வசந்தம் நீ......


வாசிக்கும் கவிதையின் 

வாசமும் வசமும் நீ



 மந்திரப்புன்னகையில் வசியம் செய்கிறாய்

மயக்கும் விழிகளால் ஜாலம்செய்கிறாய்


மணக்கும் மலராய் மனமெங்கும் நிறைகின்றாய் 

மானே ஏன் இன்னும் மறுகி நிற்கின்றாய் 

மடியில் வந்து சாயதயங்குகின்றாய்....

மன்மத அம்பை மட்டும் வீசி செல்கின்றாய்

மறதிகுள்ளே மறைந்திருகின்றாய்

மனமெங்கும் நிறைந்திருக்கின்றாய்...


Thursday 26 September 2013

கவலைகள் குறித்த


கனவுகள் வந்து வந்து


கலைகின்றன 


கவலைபடக்கூடாது


என்ற பிராஞ்ஞை 


இருந்தபோதிலும்

ஒவ்வொர்ர்முறையும்

உறக்கத்தோடு படுக்கத்தொடங்கி

பின் விழித்துகொள்கின்றன

விழித்தால் இமைகளின்

மேல் அழுத்துகின்றன

எழுந்துகுடிக்கும்

ஒரு குவளை

தண்ணீருக்கும்

பயப்படுவதாகத்தெரியவில்லை



கால்கள் சரசரக்க 


இலைகளின் பிணங்களின்

மேல் பயணம்

இறந்தகால


நினவு ஊர்தியில்


ஆங்காங்கு நிதர்சணங்களின்

தரிசணம் உயிரை உரச

கனவுகாற்று உந்திதள்ள

நினைவுபாய்மரம்

விரித்துநீள்கிறதுவேகமாக

பயணத்தின் முடிவில்

கடந்தகாலமாகவாவது

நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்

காலங்கடந்தும்

பயணிக்கின்றேன்.......


முத்தபுள்ளிகளால் ஒரு கவிதை 


முழுவதும் இதழ்களால் ஓர் பயணம்


இனிமைகளாலே ஓர் இதயம்


இரவுகளில் இனிதே திளைக்கும்....



எடைக்கு எடை தருவதாக உத்தேசம் 


எடை என்னவென்று தூக்கிப்பார்த்து 


என் எடை அல்லவா இழக்கின்றேன் 


காற்றின் எடையை அளக்கும் 


கணித வித்தையை கற்றுக்கொடு 


காதில் வந்து உன் காதலை 

கணக்காகச் சொல்லிவிடு

காதல் பாதையை
 

காததூரம்கனவோடு சொல்லித்தொடு


Sunday 22 September 2013


A Muthu Vijayan Kalpakkam
உனது சின்னசிரிப்பு கூட 
எனது மனஅமைதிக்குளத்தில் 
கல்லெறிகின்றது
நினைவு அலைகளை 
வரிசையாக உருவாக்கிக்கொண்டு
அத்தனை அலைகளிலும்
ஆடிகொண்டிருக்கின்றது
உன் அழகு முகத்தாமரை......
குளிந்த பிரபஞ்சத்தின்
எங்கோ இருக்கும்
வெப்பதுளியான உன்னை
எனது ஆன்மா
தேடி அலைகிறது
யுகங்களைத்தாண்டி
காலபெருவெள்ளத்தில்
நீந்திகொண்டு
உனது ஒவ்வொரு நினைவும்
கவிதை விதையாகும்
அதில் மறதி மண்ணைக்கிழித்துகொண்டு
வெடித்து முளைக்கின்றன
கவிதை விருட்சங்கள்
எனது வாழ்க்கைநீரை உறிஞ்க்கொண்டு
வேர்விட்டு வளர்ந்தபடி
ஒவ்வொரு நினைவு விதைகளில்
இருந்தும் முளைக்கின்றன
உன்னுடனான பகிர்தல்கள்
நினைவுச்சுழியில் நீர்குமிழ்களாக
பொங்கிவருகின்றன பொன் பொழுதுகள்....

Monday 16 September 2013

பிரிந்திருக்கும் விரல்களை


இணைக்கிறாய் 


உனது விரல்களைக்கோர்த்து 


மனங்களையும் சேர்த்தே,,,


ஓவியங்கள் அனைத்தும்


பெருமை கலைகின்றன 


உன் முகஓவியங்களின் 


உயிரோட்டத்தில்.....


களைந்துகிடக்கும் மனதில்


விளையாடுகிறது உன் நினைவு 


மேலும் களைத்தபடி


மகிழ்வில் திளைத்தபடி



நீள் பயணங்களில் 


இசையாகப் பயணிக்கின்றது 


உந்தன் நினைவு


தனிமைபோக்கியபடி





                                            விழிகளின் விழிம்பில் 



                                            விழித்து எழுகின்றன
 

                                            விரிகின்றன கவிதைகள்.
                                           வெட்டிநிற்கும் மரங்களில்
                                           
                                             தெரிகிறது குட்டிச்சுவராக
                                                    .. 
                                                   ...........பூமி......


                                                              கூர் விழிகளால் 
                                                            

                                                       
                                                             கூறுபோடுகிறாய் என் 
                                                             

                                                           
                                                             இலை இதயத்தை.......



உன்னைநினைத்து 

உன்னைநினைத்து


என்னைமறந்தேன் 


என்னை மறந்து


என்னைமறந்து 

உன்னையே மீண்டும்

மீண்டும் நினைத்தேன்,,,,,,

உந்தன்நிழலாக

என் உயிர்தேடி அலைந்த்தேன்

எந்தன் நிழல் இழந்து

உந்தன் நிழலாகிப்போனேன்,,,,,
மனக்குகையில் ஓராயிரம் ஓவியங்கள்

அனைத்தும் உன் முகமே

உனது ஒவ்வொருமுகபாவங்களையும்

பதிவுசெய்து வைத்திருக்கிறேன்

மனசுவரெங்கும் வண்ணமயமாக.. 




தொலைவுகளில் தொலைகின்றது 


என் மனது உன் நினைவுகளை துரத்தியபடி


இணைந்திருக்கும் கனவுகளுடன்


இனிமைகவிதைகளுடன்.




உனதுநினைவூஞ்சலில் 


ஆடிக்கொண்டிருக்கின்றது


நம் காதல் நிற்காமலே


ஊஞ்சலை ஆட்டிக்கொண்டிருக்கின்றது 


உன் மீதான கனவுக்கவிதைகள் 


காற்றாய்,,,,,,,




உறக்கத்தின் நடுவேயும்
உயித்திருக்கின்றன
உந்தன் நினைவுகள்
விழிகள் மூடியிருந்தாலும்
விழித்திருக்கின்றன 
உன் மீதான கனவுகள்
விழித்திருக்கும்போதும்
விழிகளுக்கு முன் திரையிடுகின்றன
உன் நிழல்கள்.........


அம்மாஉணவு கொண்டுவரும் 


ஒவ்வொருமுறையும்


பழிப்பு காண்பித்து 


ஒடுகிறாய் நிவாஸ்


பழிப்பது நடிப்பு என்றாலும்......



ஒற்றைச் சொல்லில் எனது

உதிரம் கசியவைக்கின்றாய்

ஒரேமுறை புருவத்தை உயர்த்தி

வெற்றிகொள்கிராய்

உதட்டுசுழிப்பில் என்னை 

உதிரவைக்கின்றாய்

உதிரிகண்ணீர் வடித்து

பதறவைக்கின்றாய்.........



உனதுமெளனக்கிணற்றில் 


விழுந்து கிடக்கின்றது 

எனது வார்த்தைக(ல்)ள்......


இதழ்கள் உச்சரிக்கும்

வார்த்தைகளுக்கு

எதிர்பதமாகவே பாவங்களை

வெளிப்படுத்தும்

விழிகள் தான் எனது நண்பன்

எப்போதும் இதயமொழியை

மொழிபெயர்ப்பவன்......



சாக்கடையில் விழுந்தாலும்


சளைக்காது எழுகின்றது


சந்தனமாகவே நிலவு,,,,,,