Friday 8 May 2015

சும்மா எங்கப்பன்
நகைபோடல பிச்சக்காரன்
சீரு சரியாசெய்யல
மோரு சரியாசெய்யலன்னு
குத்தம் சொல்லிகிட்டேஇருந்த
அம்புட்டுத்தேன்
முதல்ல ஓன் மகன்கிட்டக்
குடிக்கிரத நிறுத்தச்சொல்லு
கொண்டுவந்தஎல்லாத்தையும்
வித்துதின்னுபுட்டான்.....
எங்கப்பன் கல்யாணத்துக்கு
வாங்கினகடனையே 
இன்னும் அடைக்கல
திரும்பநாபோனா 
என்னபன்னுவாரு அவரு
இந்தாபாரு கடைசியா
சொல்லிப்புட்டேன்
அப்புறம் மாமியான்னுகூடப்
பாக்கமாட்டேன்
தூங்கறப்ப தலையில
கல்லத்தூக்கிபோட்டு
கொண்டேபுடுவேன்
செயிலுக்குபோனாலும்
பரவாயில்ல.......அம்புட்டுத்தேன்......
Like · Comment · 

No comments:

Post a Comment