Wednesday 20 May 2015

செங்கல்சூளயில
ஆத்தாவேலைக்குப்போயிருக்கு
தங்கச்சிபாப்பாவை
எங்கிட்டவிட்டுட்டு
கொஞ்சூண்டுநிழல்ல
எங்களைவிட்டு
கொளுத்துறவெயில்ல
வேலைசெய்யுது
கால்செருப்புகூட இல்லாம
வீட்டுக்குவந்து
ராத்திரிபூராம்
ஆத்தாஅழுகும்
நானும் அழுவேன்
வயித்துவலிதாங்காம
கண்ணெல்லாம் 
எரியுதுன்னு
கதறும்,,,,
வேறவேலைக்குப்
போனாஎன்னனுகேட்டா 
நான்படிச்சபடிப்புக்கு
கலெக்டர்வேலையா
குடுப்பாகன்னுகேட்கும்
நான்வளர்ந்து
பெரியபொண்ணானா
அம்மாவைவீட்டுலவைச்சிட்டு
நா சம்பாதிச்சு கஞ்சி
ஊத்துவேன் ஆத்தாவை
அழவிடமாட்டேன்......

No comments:

Post a Comment