Friday 8 May 2015

சூம்பிய விரல்கள்தான்
சுத்தம் செய்வதும்
சிரமம்தான்
கண்களும் பழுதுதான்
காணபதும் சிரமம்தான்
தவறி அறுபடும்
விரல்களில்கூட
கசிய உதிரம் இல்லைதான்
அரும்பாடுபட்டு
அரிந்து இருக்கும் 
கொஞ்சபுளியை 
கரைத்தும் கரைக்காமலும்
அதில்விட்டு
டப்பாவில்ஒட்டியிருக்கும்
மிச்சமிளகாய்த்தூளை
சேர்த்து காய்ந்துகிடக்கும்
பச்சமிளகாய் ரெண்டை கிள்ளிபோட்டு 
கூரையில் இருந்துவிழுந்த
சுள்ளியை அடுப்பில்வைத்து
கொதித்தும் கொதிக்காமலும்
இருக்கும் குழம்பில் 
மீனைப்போட்டு
பக்கத்துவீட்டு பார்வதி
இரக்கபட்டுக்கொடுத்த
சோறில் குழம்பைவிட்டு
பொக்கவாயில் போடும்போது
அடாடா செத்துபோற சுவை......
சொர்கம் நாக்குதான்.........
Like · Comment · 

No comments:

Post a Comment