Friday 8 May 2015

களைபுடுங்கப்போன அம்மா
கஞ்சிவைக்காமபோயிருச்சு
பழையகஞ்சி கொஞ்சம் இருக்கு
பார்த்து குடிக்கசொல்லிச்சு
பானைய தொறந்துபாத்தா
பல்லி விழுந்துகெடக்கு
பசி வயித்தகிள்ளுது
பாப்பா வேற அழுகுது
மத்தியானம் தான் 
அம்மாவரும்..
அதுவரைக்கும் பாப்பாவை
பாத்துக்கனும்...
பள்ளிகொடம்போனாலும்
சோறுபோடுவாங்க
போட்டுட்டுபோகசட்ட இல்ல
அப்பனுக்கும் அக்கரை இல்ல
குவாட்டருக்கு காசிருக்கு
அம்மாவ அடிக்க தெம்பிருக்கு
புத்திமட்டும் கொஞ்சமுமில்ல
எங்களை என்னிக்குமே
கொஞ்சினதில்ல................
Like · Comment · 

No comments:

Post a Comment