Friday 8 May 2015

காலையில தூங்கிட்டுஇருந்த
என்ன அவசரமா கூட்டிட்டு
வந்தாங்க...அவசரவேலை
அடப்ப சரிபண்ணனும்னு
யாரோ மந்திரிவாராகலாம்
பெரியநடிகரெல்லாம்
வராகலாம்...என்னவோ
தூய்மை இந்தியாவை 
தொடங்கப்போறாங்கலாம்
கொடியெல்லாம் கட்டி
தோரணமெல்லாம் கட்டி
கோலாகலமா இருக்கு
ஆனா இந்தசனியன் சாக்கடை
ராத்திரி அடச்சுபோச்சு
தெருபூராம் ஓடுது
அதான் அவசரமா
என்னைக்கூட்டிட்டு வந்தாங்க
பெரியவங்க வரும்போது
நாறிக்கிடந்தா 
நல்லாவா இருக்கும்
அதான் சுத்தம் பண்றேன்
இத நான் சுத்தம் பண்ணாத்தானே
பெரியவங்கவந்து போட்டோ
எடுக்கும்போது நல்லாஇருக்கும்
தூய்மைஇந்தியா தொடக்கவிழா
ஆனா ஒரு டவுட்டு
அவுக எதை சுத்தம் பண்னுவாக....?
Like · Comment · 

No comments:

Post a Comment