Friday 8 May 2015

காலங்காலமாவிவசாயம்
கண்டதென்னவோ 
வெறும் காயம்தான்
மாட்டவித்தேன்
வீட்டவித்தேன்
காட்டவித்தேன்
கண்டதென்னவோ
காஞ்சநிலம்தான்
மானியம் தறேன் நு
சொன்னாங்க 
எனக்கில்லயாம்
யாரோ அடானியோ 
அம்பானியோகொம்பானியோ
அவுகதான் ரொம்ப
கஸ்டப்படுறாங்களாம்
அவங்களுக்குத்தான் 
சலுகை ஒதவியாம்
நாங்க பணக்காரங்களா
ஆயிட்டோமாம்
ஒதவிய நிறுத்திபுட்டாங்க
அரசாங்கத்துக்கு தேவைனா
எங்க நிலத்தயும் 
புடுங்கிடுவாங்களாம்
எஞ்சி யிருப்பது
கோமணம்தான் 
அதையும் புடுங்கி
அம்பானியோகொம்பானியோ
அவங்கிட்டகுடுத்துட்டுத்தான்
போவாங்கபோல
எங்களை இங்கேயே
பொதைச்சிட்டூதான்
ஓய்வாங்கபோல
அப்புறமாவது நல்லாருக்கட்டும்
அந்தநல்லமனுசங்க........
Like · Comment · 

No comments:

Post a Comment