Friday 8 May 2015

ரோட்டோரக்கடை
சோளக்கருதை சுட்டு
உப்பத்தடவி முளகாத்தூள்
தூவி குடுத்தா கருதுக்கு
அம்பதுபைசா நிக்கும்
கஞ்சி வச்சிட்டுவந்தேன்
அந்தமனுசனுக்கு
குடிச்சிச்சோ இல்லையோ
முடியாதமனுசன் 
தவிக்கிதுமனசு கிடந்து
ராத்திரிபூரா இருமிகிட்டே
இருந்துச்சு நானும்தூங்கல
போய்வீடுசேரராத்திரி 
ஒன்பதுமணியாகும்
மாயக்காகிட்ட 
சொல்லிட்டுவந்தேன் 
மனசுகேட்காம
ஓடியாடிவேலைசெய்யுற 
வயசாஎனக்கு
முடிஞ்சவரைக்கும்தான்...உசுரு
ஆசை ஒன்னுதான்
சாமிகிட்டவேண்டிகிட்டேன்
எனக்கு முன்னாடி 
அவர்போய்டனும்
ஏன்னாஎன்னவிட்டா
ஒருநாதியுமில்லா அதுக்கு 
பாவம்பச்சமண்ணு...
படுத்தபடுக்கையாக்கிடக்கு......
(நிழற்பட உதவி ஃப்ராங்கிளின் குமார்)
Like · Comment · 

No comments:

Post a Comment