Friday 8 May 2015

சாமி சாமி
தினம் ஒன்னயக்
கும்பிட்டுக்கிட்டுத்தானே
இருக்கேன் 
ஒன்னு
என்னப்பெத்தவங்ககிட்ட
கொண்டுசேத்துடு 
இல்லஎன்ன 
ஆம்பளைப்பையானாக்கிடு
முடியலயா ராத்திரியே
வராம ப்பண்ணிடு
உடம்பெல்லாம்
வலிக்குது
எல்லாரும் பகல்ல
நல்லவங்கமாதிரிதான்
தெரியிராங்க....
ஆனா ராத்திரிஆனா
ஏன் இப்படி ஆயிடுராங்க
சாமி நீங்கள்ளாம் 
கோயில் உள்ளபோய்
பாதுகாப்பா தூங்கிடுறீங்க
தெருவோரத்தில
நாங்கதூங்கமுடியல.........
Like · Comment · 

No comments:

Post a Comment