Friday 8 May 2015

காலையில அம்மாட்ட
பசிக்குதுன்னு சொன்னேன்
காஞ்சுபோன ரொட்டியதேடுச்சு
அதை நாய் 
தின்னுகிட்டுஇருந்துச்சு
புடுங்கிதின்னலாம்னா
பார்க்கபாவமா இருந்துச்சு
எலும்பும்தோலுமா
அதுக்கும் பசிபோல
அப்புறம் பசிதாங்கல
அம்மாட்டகேட்டுஅழுதேன்
அடிதான் விழுந்துச்சு
அதுதான் பசியமறக்கவைக்கும்
அழுதுகிட்டெ இருந்தேன்
அம்மாவும்தான்......
என்னை
கட்டிபுடிச்சு அழுதாங்க
அம்மாவும் 
சாப்பிட்டு 2நாளாச்சு
அப்போதான் அந்த அம்மா
பிஸ்கட்கொடுத்தாங்க
தெய்வம்மாதிரி
அம்மாகிட்ட ஒன்னு குடுத்தேன் 
நான் ஒன்னு தின்னேன்
அந்தநாய்க்குட்டியதேடி
அதுக்கு ஒன்னுகுடுத்தேன்
அதுதிங்கறப்ப அழுகவந்திடுச்சு
ஆனாஅம்மா திங்கல
நீசாப்பிடு செல்லம்
நீபசிதாங்கமாட்டன்னா
என் அழுக அதிகமாயிடுச்சு,,,,,,,,,,,,,
Like · Comment · 

No comments:

Post a Comment