Friday 8 May 2015

எப்போதுவேண்டுமானாலும்
உதிரும்பருவம்தான்
அனுபவங்கள் மட்டுமே
எஞ்சியிருக்கு மிச்சங்களாய்
வாழ்க்கையின் புரிதல்கள்
வாழ்க்கைத்துணயாய்
எதுபிடிக்கும் என்றறிந்து
கொடுத்தகாலங்கள்கைநழுவி 
எது ஒத்துக்கொள்ளும்
உடலுக்கு என்று கொடுக்கும் அன்பு
இரவிலும் பகலிலும் ஒற்றை
இருமல் சத்தமே மகிழ்வளிக்கிறது
உனது இருத்தலை
உன்விரல் தொடுதலே
நீடிக்கிறது நம் உயிர்த்தலை
யாரோகொடுத்த திண்பண்டத்தை
பத்திரமாக முந்தானையில்
முடிந்து வைத்து இரவில்
போடாகிழவா என்று
பொக்கைவாயில்
கொடுக்குபோது வழிகிறது
கண்களில் அன்பு விழிநீராக....
Like · Comment · 

No comments:

Post a Comment