Wednesday 20 May 2015

சில்லென்றஅருவியே கொஞ்சிச்
சிரித்திடும் கிளிகளே 
பக்கம்வந்துவெட்கத்துடன்
எட்டிப்பார்க்கும்மான்களே
தோகைவிரிக்கமுற்படும் மயிலினமே 
கூவிக்கொண்டிருக்கும் குயில்களே 
வருடும் தென்றலே 
மழைமேகத்தில் ஒளிந்து 
வேடிக்கைபார்க்கும் வானமே 
இலைகளினூடேவெட்கமில்லாமல்
எட்டிப்பார்க்கும்பகவலனே
புன்னகைக்கும் மரங்களே
பூத்துக்குலுங்கும் மலர்களே 
என்னவன் என்னை முத்தமிடப்போகிறான்
மூடிக்கொள்ளுங்கள் உங்கள் விழிகளை
பொறாமையால்முன்னே வந்துவிடாதீர்கள்
நான் தலைவன் மார்பில் சாய்ந்ததை
தோழிகளிடம் செப்பிவிடாதீர்கள் வெறுவாய்க்கு வெற்றிலை 
கொடுத்துவிடாதீர்கள்

No comments:

Post a Comment