Wednesday 20 May 2015

கடித்தே அறுத்திடலாமோ
கம்பிவேலிகளை
துடித்தேசாவதே 
வாழ்க்கைஎனில் 
நடித்தே கெடுத்த
நயவஞ்சகர்கூட்டத்தை 
இடித்தேகேட்கயாவருமிலர்
வடித்தகண்ணீருக்கு
பிடித்துஆறுதல்சொல
தடித்தநாவுகள் 
தயங்கினவே
நொடிப்பொழுதில்
நூறுபேர்கள்
அடித்தேமடிந்ததை
படித்தும் நின்றீரே
பனைமரம்போல்....
செடிகள்போலபிடுங்கபட்டோம்
பூக்குமுன்னே கசக்கப்பட்டோம்
இடிகள் விழட்டும் 
அவர்தலைகளில்
படிகள் எதற்கு விகாரங்களில்........

No comments:

Post a Comment