Saturday 20 June 2015

கம்மாயிலதண்ணி இல்ல
கழனியிலபயிறுமில்ல
சும்மாஇருக்கப்பிடிக்கல
சோத்துக்கும் வழியில்ல
மாட்டுவண்டிக்கும்வேலயில்ல
மாட்டுக்கும்வேலயில்ல
மனுசப்பயலுக்கும்வேலயில்ல
ஆனாஇந்தவயத்துக்கும்வேலயில்ல
நாளைக்கு காளரெண்டும்
பயணம்போகுதாம் கேரளாவுக்கு
அப்பாபேசிட்டுஇருந்தாரு
யாவாரிகிட்ட
கடைசியா ஊரைஒருரவுண்டு
வாறோம்மனசுக்கு ஆறுதலா...
ஆமாஅடிமாடுன்னா என்னா 
அப்பாபேச்சுல அடிபட்டுச்சு.....

No comments:

Post a Comment