Saturday 20 June 2015

இவைகளைப்பார்த்தால்
வெட்கமாக இருக்கிறது
கேலியுடன் பார்ப்பதாக
உணர்கிறேன்....
இந்த அறையில் நீசெய்த
அத்தணைகூத்துக்களையும்
இவை வேடிக்கை பார்த்தனவே
சுவர்கள் விளக்குகள் பூஜாடிகள்
பூங்கொத்துகள் திரைச்சீலைகள்
நாம் உருண்டு புரண்ட
படுக்கை விரிப்புகள்
ஆடி அலுத்துப்போனகட்டில் 
பாம்பாகப்பிணைந்துகிடந்ததைப்
பக்கத்தில் பார்த்தபஞ்சுமெத்தை
என் பெருமூச்சுகளை
நுகர்ந்த தலையணைகள்
அறைமுழுதும்நிரம்பியிருக்கும்
நாம் கூடுதல் வாசம் 
சுமக்கும்காற்று
நாம் இணையும் போது
வெளியே அனுப்பிய வெளிச்சம்
இவையாவும் கேலிசெய்கின்றன
எப்படிவிழிப்பென் இவை மூகங்களில்
வெட்கம் பிடுங்கித்தின்கிறது
முகம்பார்க்கும்கண்ணாடியும்
கள்ளத்தனமாய்சிரிக்கிறது....போடா
Like · Comment · 

No comments:

Post a Comment