Saturday 20 June 2015

உனது மீசையில்
உள்ள ஒற்றைமுடியால்
மொத்தமுடியும்
சிலிர்க்கவைக்கிறாய்
பொம்மைகேட்டு அழும்
பச்சைக்குழந்தையாய்
அடம்பிடிக்கிறாய்
வைத்து விளையாட
உன் விரல்களுக்குள்
என்னவாத்தியக்கருவி
வைத்திருக்கிறாய்
ஏழுஸ்வரமும் பொங்கும்படி
முத்தங்கள் போதும்
மூச்சுமுட்டுதடா
மூர்க்கனே
மூச்சேநீதானடா
கண்களை 
மூடவைக்கிறாய்
உறங்க விடாமல்
கிறங்கவைத்து
தோள்களைப்பற்றி
தொடுவர்மம் செய்கிறாய்
மர்மமுடிச்சுகள் 
அவிழுமாறு
அத்துமீறிநுழைகிறாய்
அனுமதிகேட்காமலே
என் கனவுப்பக்கங்களில்
தடுக்கவியலாமலெ......
கால்விரல்களில்
சொடக்குபோடுகிறாய்
கைவிரல்களோடு
பிணைத்துக்கொல்கிறாய்
இமைகளில்வழியும்
மழைத்துளியை 
துடைத்துவிடுகிறாய்
உன் இதழ்களால்
அத்தணை வண்ணங்களயும்
என்னில் வரைகிறாய்
நான் உணரும் வண்ணம்
ஓவியமாக.......
காற்றாக மழையாகஊற்றாக
வெப்பபுயலாக காட்டாறாகக்
கடந்துசெல்கிறாய்
என்னைப்புறட்டிப்போட்டுவிட்டு
Like · Comment · 

No comments:

Post a Comment