Saturday 20 June 2015

உன்னுடன்நான்
பகிர்ந்த இரவு
என்னுள் புதைந்துகிடக்கிறது
சுகவேர்களாய் அங்கமெங்கும்
உதறிஎழமுயல்கையில்
அழுத்துகிறது உன்
வெப்பநினைவுகள் ஆயிரம்
கரங்கள் கொண்டு
இதழ்களை தென்றல்
தீண்டும்போதெல்லாம்
தீபற்றுகிறது தேகமெங்கும்
உயிரைப்பிடுங்கும்
பெருவலி பொங்கிஎழுகிறது
நெருங்கி உயிர்தந்தாய்
விலகி உயிர்பிடுங்குகிறாய்
என் கதறலைக்காணும்
துணிவில்லாமல்
ஓடி ஒளிகிறாய்.ஏனடா......
Like · Comment · 

No comments:

Post a Comment