Saturday 20 June 2015

அப்பா ஆசுபத்திரிக்கி
போயிருக்காரு
ஆளாஎன்னவைச்சிட்டு
அவருக்கு முடியல
ரொம்ப இருமுறாரு
யாவாரம் பாதிக்கப்படாதுல
அதான் ஒத்தாசையா
இருக்கக்கத்துகிறேன்
நான் கடயபெருசாக்கி
பெரியஓட்டலாக்கி
நிறயாசம்பாதிச்சு
அப்பாவை ஒக்காரவைச்சு
சாப்பாடுபோடுவேன்
நல்லதுணிமணிவாங்கிதருவேன்
அதுக்குத்தான் நான்
பள்ளிகொடம் போகல
போகவும்மாட்டேன்
அங்கஎல்லாரும் என்னய
டீகடைகாரன்மகன்
கிளாஸைகழுவுன்னுசொல்றாங்க......
Like · Comment · 

No comments:

Post a Comment