Saturday 20 June 2015

வெள்ளனாவே வேலையெல்லாம்
வெரசாவே முடிசிட்டு
நல்லதுணிமணியெல்லாம்
நாளைக்கா எடுத்துவச்சிட்டு
பாத்திரபண்டமெல்லாம்
கழுவி அடுக்கிட்டு
மருதாணிபுளிவைச்சி
அரச்சிட்டு எல்லாரும்
ராத்திரி படுக்கப்போறப்ப
அழகாகையில் வச்சி 
அசங்காமப்படுப்போம்
தூக்கத்துல அரிச்சி 
கலஞ்சிடாமை இருந்தா
காலயிலதீவாளிக்கு
புதுப்பாவாடைதாவணிபோட்டு
கையெல்லாம் செவந்து
கன்னமும் செவந்துகெடக்கும்
நல்லாசெவந்தாத்தேன்
நல்லபுருசன் கெடப்பானாம்
பாட்டி பக்குவமா சொல்லிச்சு
இப்போ கையப்பாத்தாலும்
கன்னம் செவக்குது.......
முருதாணிபோட்டவன்ன
இந்தபொண்ணுகதான்
என்ன அழகு 
வெகத்திலசிரிக்கிறப்ப
இப்போகூட சிலிர்க்குது
Like · Comment · 

No comments:

Post a Comment