Saturday 20 June 2015

பார்வயிலே 
காதலை பரிமாரினாய்
புன்னகைபூக்களை
மலரச்செய்தாய்
இதயத்துடிப்பை 
மறைத்துவைத்தாய்
நெருங்கத் தவித்ததை 
நிழலாக்கினாய்
இரவெல்லாம் 
கனவில் உதித்தாய்
பகலெல்லாம் 
பார்வையை மறைத்ததாய்
என் பசியை 
மறக்கடித்தாய்
உறக்கத்தை 
தின்று களித்தாய்
சுவரெல்லாம் 
உன்பெயரெழுதவைத்தாய்
சுற்றி நிற்பவரெல்லாம் 
நீயாகத்தெரிந்தாய்
இதழ்களை 
வறட்சியாக்கினாய்
விழிகளில் 
குளம்வெட்டினாய்
இதயத்துடிப்பை 
எகிறவைத்தாய்
எழுதும் கவிதையெல்லாம்
எழுந்துநின்றாய்
இன்னுமென்னசெய்யபோகிறாய் 
அன்பே அன்பே.....
Like · Comment · 

No comments:

Post a Comment