கேட்க ஆளில்லை என்னை
என்ற வரம் எனக்கு.....
ஒரே அடாவடி ஆரவாரம்
நினைத்ததை என்ன
விலைகொடுத்தேனும்
முடித்திடும் எகத்தாளம்
இறுமாப்பு கொக்கரிப்பு
யாராவதுகேட்டாலும்
திமிரான பதிலில்
பொசுக்கும் பலர்பார்வையில்
மது மாது மஜா என
போதையின் அனைத்து
மூலைமுடுக்கெல்லாம்
முகர்ந்து ருசித்த செறுக்கு
எல்லாம் இளமையும்
பணமும் சேர்ந்துஇருந்த
வசந்தகாலம்
இன்று அனைத்தும் பிரிந்து
முதுமையின் பிடியில்
முக்கி முனகுகிறேன்
இப்போதும் என்னைக்
கேட்க ஆளில்லை ஒருவேளை
சாப்படுகொடுக்க என்ன உடம்புக்கு
என்று பரிவுடன் கேட்க
கேட்க ஆளில்லை என்பது
இப்போது சாபம் எனக்கு.......
என்ற வரம் எனக்கு.....
ஒரே அடாவடி ஆரவாரம்
நினைத்ததை என்ன
விலைகொடுத்தேனும்
முடித்திடும் எகத்தாளம்
இறுமாப்பு கொக்கரிப்பு
யாராவதுகேட்டாலும்
திமிரான பதிலில்
பொசுக்கும் பலர்பார்வையில்
மது மாது மஜா என
போதையின் அனைத்து
மூலைமுடுக்கெல்லாம்
முகர்ந்து ருசித்த செறுக்கு
எல்லாம் இளமையும்
பணமும் சேர்ந்துஇருந்த
வசந்தகாலம்
இன்று அனைத்தும் பிரிந்து
முதுமையின் பிடியில்
முக்கி முனகுகிறேன்
இப்போதும் என்னைக்
கேட்க ஆளில்லை ஒருவேளை
சாப்படுகொடுக்க என்ன உடம்புக்கு
என்று பரிவுடன் கேட்க
கேட்க ஆளில்லை என்பது
இப்போது சாபம் எனக்கு.......
No comments:
Post a Comment