Sunday, 11 October 2015

காணும் இடத்திலெல்லாம்
நிறைந்து கிடக்கும் உன் தேகம்
கண்களைமூடினாலும்
குறைவதில்லை அதன் தாக்கம்
காண இயலவில்லை என்பதே
கண்களின் ஏக்கம்
நினைவின் ஒவ்வொருதுளியிலும்
நீங்காது நிரவிக்கிடக்கிறது
என் தாகம் 
கண்டும் காணாமல் 
கண்ணாமூச்சிகாட்டுகிறது
கண்ணாளா உன்
காட்சிதரும் யாகம்
என் மனதைத்தட்டுகிறது
சந்தேகம் எனும் காகம்
பதில் சொல்லவருவாயா
பதிலாகவருவாயாஅல்லது
பதறவைத்துபார்ப்பாயா
கலங்கிடக்கும் குட்டையாய்
கண்ணாளானைதேடும்நெஞ்சம்.....

No comments:

Post a Comment