அகதியானபோதுகூட
அழவில்லை நீ
சகதியில் கிடந்தபோது
நான் புதைந்துபொனேன்
காலையில் குடித்தபால்
கடைவாயில் காயவில்லை
இடுப்பில் இருந்ததடம்
இன்னும் அழியவில்லை
பசிக்காகக் கடல் நீர்
குடித்தாயோ கடல்
தன் பசிக்கு
உன் உயிர்குடித்ததோ
உன் எச்சில் ஈரமக்கியது
கடல் மண்ணை
ரணமாக்கி துடிக்கின்றன
காணும் கண்கள்....
No comments:
Post a Comment