Sunday, 11 October 2015

ஆயிரம் தடவை 
காபி குடித்தாலும்
அம்மா உன் கைமணம், 
யாருக்கும்வராது 
பாலும் குறைவுதான் 
தண்ணீரதிகம்தான் 
ஃபில்ட்டர்கூட இல்லைதான் 
மட்டமான விலைகுறைந்த 
காபிப்பொடிதான் 
சீனிகூடை இல்லைதான் 
கருப்பட்டிக்காபிதான் ஆனால் 
என்னமாயம் செய்வாயோ 
ஒரு மடக்கு நா தாண்டி
தொண்டையில்
இறங்கும்போதே
நெஞ்சம் தொட்டு 
நெகிழவைத்துவிடும்
இரண்டுவேளைபசிதாங்கும்......

No comments:

Post a Comment