பள்ளிமுடிந்து வீடுதிரும்பியதும்
பசிவயிற்றைக்கிள்ளும்
அடுக்களையில் தேடினால்
அத்தனைபாத்திரமும்
கழுவி கவிழ்த்தபடி
அம்மாஉனிடம் நான் சொன்ன
அடுத்தநொடியில்
டப்பாக்கள் பல குடைந்து
கொஞ்சம் ரவைகண்டுபிடித்து
எண்ணைஇல்லாததால்
வெறும் கடுகு வெடிக்கவைத்து
பட்டமிளகாரெண்டுபோட்டு
காய்ந்தகறிவேப்பிலை
பிச்சிபோட்டு
தண்ணீர்கொதிக்கவைத்து
லேசா உப்பிட்டுரவைபோட்டு
சரட்டுசரட்டுன்னு கிண்டும்ப்போதே
வாசம் ஆளைதூக்கி
நாமுழுதும் சுரந்துவிடும்
பாசமுடன் தட்டில்
நீ வைக்கும்போதே
என் உயிர் லயித்துவிடும்
வயிறும் நிறைந்துவிடும்
உன் மனம்போலவே..
பசிவயிற்றைக்கிள்ளும்
அடுக்களையில் தேடினால்
அத்தனைபாத்திரமும்
கழுவி கவிழ்த்தபடி
அம்மாஉனிடம் நான் சொன்ன
அடுத்தநொடியில்
டப்பாக்கள் பல குடைந்து
கொஞ்சம் ரவைகண்டுபிடித்து
எண்ணைஇல்லாததால்
வெறும் கடுகு வெடிக்கவைத்து
பட்டமிளகாரெண்டுபோட்டு
காய்ந்தகறிவேப்பிலை
பிச்சிபோட்டு
தண்ணீர்கொதிக்கவைத்து
லேசா உப்பிட்டுரவைபோட்டு
சரட்டுசரட்டுன்னு கிண்டும்ப்போதே
வாசம் ஆளைதூக்கி
நாமுழுதும் சுரந்துவிடும்
பாசமுடன் தட்டில்
நீ வைக்கும்போதே
என் உயிர் லயித்துவிடும்
வயிறும் நிறைந்துவிடும்
உன் மனம்போலவே..
No comments:
Post a Comment