Tuesday, 28 July 2015






ஓவியம் 
வரைந்து வைத்தேன்
கவிதைவரிகளால்
இதயம் ஒன்றைப்
பொருத்தி அதில்
ரசனைவிதை 
தூவிவைத்தேன
பாதம்முதல்
தலைவரை பார்த்து
பார்த்து வரைந்தேன்
கவிதையாய்,,,,,
முகம் மட்டும்
முடிக்காது வைத்திருந்தேன்
சரியான முகம்மட்டும்
கிட்டாமல் 
பலமுகங்கள்
வந்துபோயின 
எந்தமுகம் பொருந்தும்
முகமென காத்திருந்தபோது
வந்தமுகம்தான்
வசந்தம்தரும் 
உந்தன் முகம்...
அத்தனைகவிதை
வரிகளும் பொருந்தும்
அழகு முகம்..........

No comments:

Post a Comment