எங்கிருந்தோ
மீட்டுகிறாய் 
ஆனந்தயாழை
என்னில்புகுந்து
என்னை 
ஆட்டுவிக்கும்படி
செவிவழிபுகுந்து
இதயம் பிசையும்
ஓர் அற்புதவடிவத்தில்
இதயமெங்கும் 
நிறைந்து
விழிகளில் வழிகின்றதே
உன் இசை
நாசித்துவாரங்களின்
வழிகூட நனைகின்றதே
எப்படி ஆட்கொள்ளுகிறாய்
என்னை 
உன் விரல்கள்
கம்பிகளில் செய்யும்
ஜாலத்தால்......
 
No comments:
Post a Comment