Tuesday, 28 July 2015





எனது சிறகுகளின்
பலவீனத்தை எப்படி
உணர்ந்தாய்
என்விழிகளின்
தனிமை க்கதறலை
எப்படிநாடிபிடித்தாய்
சிறகுகள் பிய்ந்து
பறக்கவியலாது
பதறும் என் சோகத்தை
எப்படிஉன் வரிகளில்
பூக்களாக்கி 
மாலைதொடுத்தாய்
எனதுவிழிதுடைக்கும்
விரல்களை 
இத்தனைநாளாய்
எங்குவைத்திருந்தாய்
எனது மனபாரங்களை
இறக்கிவைக்கும்
மேகமாக எப்படி
எனக்குத்தெரியாமல் 
மாறினாய் 
என் கதறலுக்கு
கண்ணீர்சிந்தும்
மழைமேகமாக எப்படி 
உருவெடுத்தாய்....
அழவைக்காதேடா......

No comments:

Post a Comment