Tuesday, 28 July 2015






உன் தோளைச்சற்று
கடன் கொடு
சற்று நான் சாய்ந்து
இளைப்பாறுகிறேன்
வாழ்க்கையின் சுமைகளோடு
ஓடிக்களைத்திருக்கிறேன்
கொஞ்சம்
இறக்கிவைக்கிறேன்
உன் தோள்களிலில்
பின் மீண்டுதொடர்கிறேன்
என் புதுபித்தசுமைகளோடு
உன் தோள்கள்தான் எனக்கு
ஆறுதலையும் 
தெம்பும் தருகின்றன
சற்றே இளைப்பாரக்
கடன் தருவாயா
கண்களில் நீரை சற்று
துடைப்பாயா........

No comments:

Post a Comment