Tuesday 5 February 2013


அர்த்தமற்ற அமைதி என்னை அலைக்களிக்கிறது
ஆழ்மனதின் வலி உயிரைப்பிசைகிறது
உள்ளே நுழைந்து ஊணை உருக்குகிறது
உன்னை வேண்டி உள்ளம் தவிக்கிறது

மயங்கிக்கிடக்கிறேன் நான் மடிமீதல்ல மனம்மீது 
விழுந்துகிடக்கிறேன் விழிக்குளத்தில் 
நீந்துகிறேன் கனவுகளில் 
மயங்கியேவாழ்கிறேன் கவிதைகளில் 
மெளனகாயங்களால் உறைந்துகிடக்கிறேன்

உனக்கும் எனக்கும்மான பிரிவு என்று ஒன்றில்லை 
இடைவெளியில் சிறு மாற்றம் 
சிலநேரம் குறைவாக சிலநேரம் 
மிகக்குறைவாக அவ்வளவே

மலரும் மயிலிறகும் 
மலரின் வாசமும் மயிலிரகின் வருடலும் 
இரவெல்லாம் என்னை இம்சிக்கின்றன
உடன் நீ உறையாதால்

1 comment: