Tuesday, 5 February 2013


உனதுவருகைதிருவிழா

மோகனம் முகாமிட்டுக்கிடக்கிறது
தாபம் தஞ்சமடைதிருக்கிறது 
காதல் கடிவாளம்போட்டு இழுக்கிறது
கண்கள் காவியமாகிறது

உன் கயல் விழிகள் காதல் பாடம்நடத்துகிறது
இதழ்கள் கவிதை எழுதுகிறது 
வதனம் பூவாக மலர்கின்றது 
வண்ணம் வசீகரிக்கிறது

உன் பட்டு விரல்கள் பட்டு 
நீரும் ஒவியமாகிறது 
தாமரை இலையும் பூவாகமலர்கிறது
நாணலும் நாணம்கொள்கிறது 
நாவாய் நகர மறுக்கிறது


புற்களும் பூக்களாகும் 
புள்ளினங்களும் கவிபாடும் 
தென்றலும் இசைபாடும் 
தேன் மதுரமும் சொட்டிவைக்கும் 
உன் பாததரிசணம் கண்டு

தனிமையில் உறையும் தருணங்களில் 
என்னுள் பொங்கும் உன் நினைவுகள் 
என்னை உன்மத்தமாக்குகிறது 
என்னை முடக்கிப்போடுகிறது இயங்கவீடாமலே 
நீ இயக்குகிறாய் எங்கிருந்தோ என்னை....

பூக்கள் மலருகின்றன் உன் வருகைகண்டு 
புற்கள் சிரிக்கின்றன உன் பொற்பாதஙகள் பட்டு 
குயிலும் மகிழ்ந்து கூவுகிறது நீ வருமோசை கேட்டு 
மரங்களும் தலைஅசைக்கின்றன 
உன் தலை அசைப்புபார்த்து...

No comments:

Post a Comment