ஒற்றைககடிதத்தில் உனது 
உன் உள்ளத்தை உருக்கி 
வரைந்திருக்கிறாய் 
உணர்வுகளை 
எழுத்துகளாக்கி 
உயிர்தந்திருக்கிறாய்
கண்ணீரில் நனைத்து
வெப்பபெருமூச்சில் உலர்த்தி
உதிரத்தில் கையொப்பமிட்டு
மோகததை
முத்தங்களால் பதித்து
சோகங்களை மடித்து
அனுப்புகிறாய்
அத்தனையும்
உன்
இதழ்தரும்
ஒற்றை முத்ததிற்கு ஈடாகுமா... 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment