ஒற்றைககடிதத்தில் உனது
உன் உள்ளத்தை உருக்கி
வரைந்திருக்கிறாய்
உணர்வுகளை
எழுத்துகளாக்கி
உயிர்தந்திருக்கிறாய்
கண்ணீரில் நனைத்து
வெப்பபெருமூச்சில் உலர்த்தி
உதிரத்தில் கையொப்பமிட்டு
மோகததை
முத்தங்களால் பதித்து
சோகங்களை மடித்து
அனுப்புகிறாய்
அத்தனையும்
உன்
இதழ்தரும்
ஒற்றை முத்ததிற்கு ஈடாகுமா...
No comments:
Post a Comment