Friday, 22 February 2013

ஒற்றைககடிதத்தில் உனது 


உன் உள்ளத்தை உருக்கி 


வரைந்திருக்கிறாய் 


உணர்வுகளை 


எழுத்துகளாக்கி 


உயிர்தந்திருக்கிறாய்


கண்ணீரில் நனைத்து

வெப்பபெருமூச்சில் உலர்த்தி

உதிரத்தில் கையொப்பமிட்டு

மோகததை

முத்தங்களால் பதித்து

சோகங்களை மடித்து

அனுப்புகிறாய்

அத்தனையும்

உன்

இதழ்தரும்

ஒற்றை முத்ததிற்கு ஈடாகுமா...

No comments:

Post a Comment