Tuesday, 5 February 2013


விழிகளின் பின்னே விழித்திருக்கும் ஓர் வசந்தம் 
வீழ்ந்துகிடக்கும் நெஞ்சதிற்கே சொந்தம்

விழியே வழியாக விரிகிறது
உள்ளே உன் முகம் தெரிகிறது
மயிலின் இறகாய் கண்மை
மயங்கிக் கிடக்கிறது பெண்மை

இரவில் என் எண்ணங்களின் மொழி 
கண்ணீராக வழிகிறது 
என்னைப்பார்த்து நிலவும் 
சோகம் பொழிகிறது

தனிமையில் நான்
என்னுள் தொலையும் வேளைகளில் 
அலையாக வந்து 
ஆட்கொள்ளுகிரது உன் நினைவு
பிறைகளின் நடூவேயும் நிறைவாய் நீ 
என்னுள் நிறைகிறாய் முழுமதியாக

வலிகளின் உச்சத்தில் உன் பெயர்
உச்சரிப்பில் என்னை மறக்கிறேன்
விடுதலையாகஉன்னை உணர்கிறேன்
மீட்டெடுப்பாய் என்னை நீ என்று

உன்னோடு உறையும் வேளைகளில் 
உயிர்தெழுகிறது 
என்னுள் உரையும் ம் கானல் வரிகளும் 
காதலின் கவிதைகளும்

உன்னுடனே உயிர்திருக்கிறேன் 
மற்றவேளைகளில் மரத்துபோகிறேன் 
கண்ணுக்குள் உன்னைதேடுகிறேன் 
கனவிலேநான் வாழ்கிறேன்

விதையாய் நான் விருட்ச்சமாக நீ 
பாதையாக நான் பயணமாக நீ
உயிராகநான் உடலாக நீ
கதையாக நான் காவியமாக்கினாய் நீ

உன் செல்ல சிணுங்களில் தொடங்குகிறது
ஊடலின் உருவாக்கம் 
முடிகிறது கூடலின் குதூகலங்களில்
வழக்கம் போலவே காதலுடன்

No comments:

Post a Comment