Tuesday, 5 February 2013


வலிகள் தான் எனக்குச்சொன்னது 
உன்னை நேசிக்கும் அளவை
விழிகள் அதை அளந்தன
வழியும் நீரை வைத்து

கவிதையும் காதலும் கைகோர்க்கிரது
காலங்கள்தாண்டி கலந்திருக்க
விரல்களும் விரல்களுடன் மொழிபெயர்க்கிறது 
இதயத்தின் மொழிகளை கண்களைப்போலவே

உன் ஒவ்வொரு செயலும் 
என்னை வசியம் செய்கிறது 
எனக்கிடப்ட்ட கோடுகளை தாண்டும் படி
மாயக்கலைகளில் மன்னன் நீ மயக்கும் முடிவுடன்

என் கண்களுக்குள்ளே கனவுகள் விதைக்கிறாய் 
கள்ளத்தனமாக இது எது மாதிரியான திருட்டு
 கொள்வதற்க்கு பதில் விதைப்பது

என்னை அறீயாமலே சிதறி விடுகின்றன 
என் முறுவல் முத்துக்கள் 
உன்னை கண்டதும் என்னால்
மறைக்கவியலாமலே......

உன்னோடு உறையும் வேளைகளீல் 
என்னுள் கரைகிறேன் என்னை மறந்து
என்னுள் உறங்கும் படிமானங்களை
தவறவிடுகிறேன் என்னில் நிறைந்து

உன் பார்வையின் அர்த்தங்களில் 
பரவசமடைகிறேன்
பழுதுகளற்று பயணப்படுவதால் 
பசப்புகளுடன் சமரசம் மறுப்பதால்

உன் புன்னகை சாம்ராஜ்யத்தின் எல்லைகள்
 என் இதயம் முழுவதும் ஆக்கிரமிப்பில் 
என் எல்லைகளை உடைத்தபடி 
பரவிக்கிடக்கிறது என்னை அடிமையாக்கி

No comments:

Post a Comment