Tuesday, 5 February 2013


உயிரின் விளிம்பிலே
ஊசலாடுகிறது
உனக்கும் எனக்குமான
யுத்தம்
உணர்வுகளின்
பகிர்தல்கள்
...
உறைந்துபோய்
உன்மத்தஙள்
ஆக்ரோசமாய் உயிர்த்து
உச்சத்தில்
நடக்கிறது உயிர்
போராட்டம்
கனவுகள்
கலைந்துபோய்
காதலும் வற்றிப்போய்
கலகலதுக் கிடக்கிறது
கண்ணீர் ஆளுமையில்..........

2
  1. வறண்ட ஆற்றுப்படுகையில்
    வாசமிழ்ந்த்து கிடக்கிறது
    நீரின் சாம்ராஜ்யம்

    ஒரு பேரரசின் வீழ்ச்சியின்
    படிமங்களை விளம்பரப்படுத்திக்கொண்டே
    ...
    அதைச்சார்ந்திருந்த விளை நிலங்கள்
    பிறிதொரு ஆளுமைக்குள்
    அடங்கி விட்டன

    நீரின் வீர் பராகிரமங்கள்
    கல்வெட்டுக்களாய்
    வழிநெடுக பாறைகளில்
    தன்னை கரைத்த கதைகளை
    சொல்லியபடி

    பேரரசின் மிச்சங்கள்
    நாற்றமெடுக்கும் குட்டைகளாய்
    சாயக்கழிவுகளுடன்
    மீண்டு எழும் சாம்ராஜ்யக்
    கனவுகளுடன்

    அதற்கு ஆறுதல் சொல்லியபடியே
    தவளைகளும் நத்தைகளும்.....

No comments:

Post a Comment