Thursday 16 October 2014

மேகங்களின்விளிம்பில்
ஒளிக்கீற்றாய் ஒளிகிறாய்
மழைத்துளியின் நுனியில்
பிம்பமாக மின்னுகிறாய்
புல் நுனியில் இருக்கைஅமைத்து...
அமர்ந்திருக்கின்றாய்
அருவியில் தெறித்துவந்து
முத்தமிடுகிறாய்
அலைகளில் ஆர்பரித்து
அணைக்கவருகிறாய்
அகிலமெல்லாம் நிறைந்து
ஆட்கொள்ளுகிறாய்


No comments:

Post a Comment