Thursday 16 October 2014

நீரின் குமிழாய்
நீர்த்துகொண்டே
பொங்கிபிரவாகமாக
சுழிக்கிறதுவாழ்வின்
பிரிக்க இயலாத முடிச்சுகள்...
அடியும் நுனியும்மாறிமாறி
சுழன்றுகொண்டே பிடிபடாது
நகர்ந்துகொண்டே
பிறக்கிறதுதினம்


விச நாக்கின்நுனியில்
வாழ்வைஅடகுவைத்து
தினம்செத்துபிழைக்கும்
நித்யகண்டமாக நீள்கிறது
எந்தகணமும் அறுந்து
தலைபிளக்கும்
பனைக்கருக்காக
தொங்கிக்கொண்டே
ஒருவேளைஉணவும்
கானல்நீராய் குதிரை
முன்கட்டிய உணவுதுண்டாய்
ஓடிக்கொண்டிருக்கிறது முன்னால்
இலக்கறியாது ஓடிக்கொண்டிருக்கும்
வண்டியின் பின் சக்கரம்போல்
ஓட்டம்வாடிக்கையானதுதான்

No comments:

Post a Comment