Thursday 16 October 2014

பேதமைபெண்ணென்றுசொல்லி
புறமுதுகில்குத்தும்
பெண்பித்தரெல்லாம்
இரவுகவிழ்ந்தபின்
காலைநாவால் கழுவி...
கவிழ்ந்து பிறந்தபாக்கியம்
தேடும் அய்ந்தறிவு அயோக்கித்தனம்
அகம்முழுதுமப்பிகிடக்க
விடியலில்பின்வழிவெளியேறும்
முக்காடுமுகத்தினர்

வெளிச்சம்வரவர சுயரூபம்
மறைத்துசொடுக்கும்
சவுக்காகாநாமாறும்
நபும்சகர்கள்நயவஞ்சக
முகமுடிஅணியும் தீர்ப்புவாதிகள்
கொன்றுபுதைத்துபின்
கொடியேற்றிக்கொண்டாடும்
கொடுமைபக்தியாளர்கள்
நாவால்கால்கழுவவேண்டாம்
காலில் குங்குமமிட்டு
கும்பிடவேண்டாம்
ஒதுங்கிவழிவிட்டால்
தெரிகிறதுஒராயிரம் வழிகள்.........

No comments:

Post a Comment