எனது கவிதைகளின் விதை நீ யாக
உனது கனவுகளின் விருட்சம் நானாக
எனது விரல்களின் நீட்சிக்கு
அப்பால் உள்ள எல்லைகளில்
உனது விழிகளை நனைக்காதே
விழிமூடியபின் எனக்கு வழியில்லை துடைக்க
என்னைத்துரத்தும் நினைவுகளில் மிஞ்சி நிற்க்கிறாய்
எனதுகனவுகளில் துஞ்சி நிற்க்கிறாய்
முகத்தோடு முகம்வைத்து கொஞ்சி நிற்க்கிறாய்
எனது வாழ்வின் பக்கங்களாக எஞ்சி நிற்க்கிறாய்
உதிர்ந்திட்டமுத்துக்களை எண்ணிப்பார்க்கிறேன்
உதிர்த்ததெப்படி என்றும் எண்ணிப்பார்க்கிறேன்
கலங்கும்கண்கலைத்தேற்றீப்பார்க் கிறேன்
கலைந்துபோய் தரையில் கிடக்கிறேன்
அ,முத்துவிஜயன்.
No comments:
Post a Comment