Tuesday 5 February 2013


எனது கவிதைகளின் விதை நீ யாக
உனது கனவுகளின் விருட்சம் நானாக

எனது விரல்களின் நீட்சிக்கு
அப்பால் உள்ள எல்லைகளில்
உனது விழிகளை நனைக்காதே 
விழிமூடியபின் எனக்கு வழியில்லை துடைக்க


என்னைத்துரத்தும் நினைவுகளில் மிஞ்சி நிற்க்கிறாய் 
எனதுகனவுகளில் துஞ்சி நிற்க்கிறாய் 
முகத்தோடு முகம்வைத்து கொஞ்சி நிற்க்கிறாய்
எனது வாழ்வின் பக்கங்களாக எஞ்சி நிற்க்கிறாய்

உதிர்ந்திட்டமுத்துக்களை எண்ணிப்பார்க்கிறேன் 
உதிர்த்ததெப்படி என்றும் எண்ணிப்பார்க்கிறேன் 
கலங்கும்கண்கலைத்தேற்றீப்பார்க்கிறேன்
கலைந்துபோய் தரையில் கிடக்கிறேன்
அ,முத்துவிஜயன்.

No comments:

Post a Comment