Friday 3 April 2020


போராளி
அந்த அம்மா அடுப்பைப் பத்தவைக்குபோதெல்லாம் ஓடியாந்து அமத்திப்புடுவாரு அவரு. வீட்டுக்குள்ள தீய பொருத்தாத எல்லாரும் எரிஞ்சுபோயிடுவாகம்பாரு . வெளக்கக்கூடப்பொருத்தவிடமாட்டாரு

வீடுதீப்பத்திக்கும்பாரு. இம்புட்டுக்கும் அது காரவீடுதான் ஆனாலும் விட மாட்டாரு

அவரைப்புடிச்சிக்கொண்டுபோயி ரூமுக்குள்ள தள்ளிக் கதவச் சாத்துறதுக்குள்ள போதும் போதுமன்னு ஆயிடும். அப்பொறம்தான் அடுப்பப்பத்தவைக்ககமுடியும்

அப்புடிப் படுத்துவாரு. கண்டதத் தின்னுபுட்டு அப்பறம் செமிக்காம

அங்கங்க அசிங்கம் பண்ணிடுவாரு

அவரச்சமாளிக்கப்பெரும்பாடா இருக்கும்

முடிவெட்டுற சலூனுக்குக் கூட்டிப்போறதுக்குள்ள உசிறுபோயிடும்

அங்கபோனா என் கழுத்த சேவிங் பண்ணும்போது அறுத்துடுவாகம்பாரு

அவரோட மயன் அவர அடிச்சி இழுத்துட்டுப்போவான் அழுவாரு பாக்கபாவமா இருக்கும்

அன்னிக்கி அவரப்பாக்க ரெண்டுபேரு வாரேன்னு சொல்லிருந்தாக, அவரு கூட வேலபாத்தவகளாம். அதுக்கு அவரத்தயார்பன்னிக்கிட்டு இருந்தாக முடிவெட்டி சேவ்பண்ணி குளுப்பாட்டி

வெள்ளவேட்டி சட்ட போட படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தாக

ஒருவழியாத்தயார் பண்ணிட்டாக பாக்க அப்புட்டு அழகா இருந்தாரு அவருபேரும் அதுதான் அழகருதான்

வந்து பாத்தவுக விசாரிச்சாக இப்ப எப்புடியிருக்காருன்னு

அதுக்கு அவரு சொன்னாரு ஓடிப்போயிடுங்க தீப்புடிக்கப்போகுது

இங்க எல்லாரும் சாகப்போறாகன்னு கத்துனாரு

எப்புடி இருந்த அவரு இப்புடியாகி போனாறேன்னு கண்ணு கலங்குச்சு அவுகளுக்கு

அது 1974 ரயிவேகுட்செட்ல அழகர் முழங்கிட்டு இருந்தாரு எனவே நாம் போராடும் நிலைமக்குத்தள்ளப்பட்டு இருக்கிறோம் அகில இந்திய அளவில் ஜார்ஜ்பெர்ணாடஸ் தலைமையில் பொராட்டம் நடக்கிறது இந்தமேமாதம் 8ஆம்தேதி வேலைநிறுத்தம் தொடங்குகிறது. ரயில்கள் நாடுமுழுவதும் ஓடாது...ன்னு பேசிக்கிட்டு இருந்தாரு வெளியே போலீஸ் லாரிவந்து நின்னுச்சு போலீசைகுமுச்சிருந்தாக

அவங்க அழகரக்கைதுசெய்ய வந்திருந்தாக அப்போ எமெர்ஜென்சி இந்திராக்காந்தியால் அறிவிக்கப்பட்டு இருந்துச்சு. எல்லாத்தொழிலாளர்களும் அழகரைச்சுத்தி நின்னாக தலைவரக் கைதுசெய்ய விடமாட்டோம்னு கோசம் போட்டாக

ஆனா போலீசு தடியடிப்பிரயோகம் நடத்துவோம் ந்னு தயாரா நின்னாக அப்ப அழகர்சொன்னாரு எப்புடியும் கைதுபண்ணிருவாக வீணா எல்லாரும் பாதிக்கப்படவேணாம் வெலகி நில்லுங்கன்னாரு கூட்டம் ஒத்துக்கல

ஆனா அழகரு கையெடுத்துக்கும்புட்டாரு

தலைவருக்குகட்டுப்படுங்கள் வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச்செய்யுங்கள்ன்னு மொழங்கினாரு போலீஸ் அவர அரெஸ்ட் பண்ணுச்சு அப்பவே எட்டாம்தேதிக்கிப்பதிலா நாலாம்தேதியே வேலைநிறுத்தம் தொடங்கிடுச்சு

புடிச்சிட்டுபோன அழகரைப்பத்தி எந்தத்தகவலுமில்ல. கண்டன ஊர்வலம் மீட்டிங்குன்னு நடந்துச்சு ஆனா அவரைக்கண்டுபுடிக்கமுடியல

அவர ரகசியமாகொண்ணுட்டதா பேச்சு அடிபட்டுச்சு அவரோட சம்சாரமும் புள்ளைகளும் அழுதுகிட்டு இருந்தாக தினம் கூடவேலபாக்குறவுகவந்து ஆறுதல் சொல்லிட்டு இருந்தாக ஆனா அவரப்பத்தி தகவல் ஏதும் கெடைக்கல

அன்னிக்கி அவுகவீட்டுக்கு கரைச்சான் மண்டயோட ரெண்டுபேருவந்தாக வந்து கொத்தா பேப்பருகளக்கையில குடுத்தாக

அவரு சென்ட்ரல்செயில்லஇருக்குறதாகவும் அவரவாரவெள்ளிக்கெழமமனுப்போட்டு பாக்கலாம்னு சொன்னாக

கொஞ்சநேரத்துலயே கூட வேலபாக்குறவுக வந்து அந்தக்கத்தப்பேப்பர வாங்கிப்பாத்துட்டு அவருமேல அரசாங்கம் குத்தம் சாட்டிருக்கு தேசதுரோககுத்தம்னு சொன்னாக நீங்கவாங்க மனுப்போட்டுப்பாக்கலாம்னாக

வெள்ளிக்கெழம மனுப்போட்டு காத்திருந்தாக மொதல்வகுப்புசெயிலாம் அங்க முழு இருட்டாம் வெளிச்சத்தக் கண்ணுல காட்ட மாட்டாகளாம் நாளுபூராம் இருட்டுலயே இருக்கனுமாம்

மனரீதியாக்கொடுமப்படுத்துவாகலாம்

அப்ப ஒரு செயில் போலீசு வந்து கூப்புட்டாரு அழகரப்பாக்கவ்ந்தவுக ஆருன்னு நாங்கதான்னு சொன்னதும் கூப்புட்டுபோனாக அங்க ஒரு ரூமு

அதுல செயிலாபீசர் முன்னாடி அவரப்பாக்கலாம் சொந்த்க்காரவுகமட்டும்தான் பாக்கமுடியும் கூடவேலபாக்குறவுக பாக்கமுடியாதாம் போய் காத்திருந்தாக

அவரு நடக்கமுடியாம நடந்துவந்தாரு புடிச்சிட்டுப்போயி மூணுமாசமானதுனால மெலிஞ்சுபோயிருந்தாரு இவுகளப்பாத்துட்டு உசுறோட இருக்கீகலான்னு அழுதாரு இவுகளும் அழுதாக அப்பக்கேட்டார் வீடுதீப்புடிச்சி நீங்கல்லாம் செத்துப்போனதா சொன்னாகலே உண்மையில்லயானு இல்ல அதெல்லாம் உண்மையில்லனாக

என்னையக்கூட கொலபண்ணப் போறதாபயமுறுத்துராக நான் பயப்படல ஆனா ஒங்கள நெனச்ச்தான் கவலயா இருக்குன்னாரு...

அதுக்குள்ள நேரம் முடிஞ்சிருச்சுன்னாக

அழுதுகிட்டே வெளிய வந்துட்டாக அப்புறம் ஆறுமாசமாச்சு வெளிய விட ஆனா வெளியவரும்போது இப்ப இருக்குறமாதிரி வந்தாரு அதுல இருந்து இப்புடி ஆகிட்டாரு

வேலையில நிப்பாட்டிருந்தாக

அதுக்கப்புறம் அரசாங்கம் மாறி வேலைக்கி எடுத்துக்கிட்டாக ஆனா இவரு இப்புடி எல்லாத்தையும் பாத்து பயப்படுறமாதிரி ஆகிபோனாரு

அவுக சொல்லிட்டுக்கெளம்புனாக அப்ப அவரு சொல்லிக்கிட்டு இருந்தாரு இவனுக போலீசுதான் சீக்கிரம் எல்லாரும் வெளியே ஓடுங்க வீட்டுக்குள்ள வெடிவச்சிட்டானுக வெடிக்கப்போகுதுன்னு

வந்தவுக கண்ணு கலங்கிடுச்சு அவுகளுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அவரோட சம்சாரம் கண்ணுல இருந்தும் கண்ணீர் ஊத்திக்கிட்டு இருந்துச்சு

கவிச்சிகரம் .முத்துவிஜயன்

No comments:

Post a Comment