Sunday 7 December 2014

நம்பிக்கை.........
----------------------------------
உதாசீனங்களே
உன்னை உறுதிப்படுத்துகிறது
அவமானங்களே 
உன்னைப் பக்குவப்படுத்துகிறது
தாக்குதல்களே 
உன்னை தயார் செய்கின்றது
தவிர்த்தல்களே
உன்னை தைரியப்படுத்துகிறது
ஒவ்வொருதோல்வியும்
உன்னை வெற்றியை நோக்கி
விரயவைக்கின்றது
விழுவது எல்லோருக்கும்
வியப்பானதல்ல
விழும்போதேஎழுவதை
பற்றியநினைவுடன் விழு
எழும்போது 
விழமல் இருக்கும்படிஎழு 
உன் வீழ்ச்சியில் பரிதாப்படுபவர்கள்
உன்னை மேலும் வீழ்த்துகிறார்கள்
கைதட்டுபவர்களே உனக்கு
கைகொடுக்கிறார்கள்....
நண்பா வாழ்வது ஒருமுறைதான்
எழுந்தால் வாழலாம் 
எத்தனை முறை விழுந்தாலும்..................
.

No comments:

Post a Comment