Sunday 7 December 2014

உறங்கும்போதுகூட
விலகும் விரலை
திடுக்கிட்டுப்பிடிப்பாய்
உண்ணும்போதும் மடியில்
அமர அடம்பிடிப்பாய்
கண்பார்வையில்மறைந்தால்
கதறி அழுதிடுவாய்
முத்தம் கொடுக்காமல்
மூடியதில்லை உன் விழிகள் 
நான்வரும்
சத்தம்கேட்கவே காத்திருக்கும் 
உன் செவிகள்..
தாடை பிடித்தே காரியங்கள்
அனைத்தும் சாதித்திடுவாய்
புத்தாடைஅணிந்து முன்நின்று
கண்கள்பனிக்கச்செய்வாய்
கைபிடிக்காமல் உன்
பாதங்கள் வீதியில்
இறங்கியதில்லை
பள்ளியில் விடும்போது
டா டாசொல்லாது 
மறந்தமைக்காக
பலப்பல லஞ்சம்பெற்றாய்
உடைகளை என்னை
தேர்வுசெய்யச்சொன்னாய்
படிப்பை என்னை 
தேர்வுசெய்யச்சொன்னாய்
வேலைக்குகூட என்னையே 
விபரம்கேட்டாய்
வாழ்க்கைத்துணையைமட்டும் 
ஏன் மகளே
மறைத்துவிட்டாய்.....................

No comments:

Post a Comment