Sunday 7 December 2014

ஜலசமாதியாய்..........
---------------------------------
அமைதிநதிக்குள்ளே
ஆழ்மாகப்புதைந்துகிடக்கின்றன
விழிநனைந்த நினைவுகள்
துயரம்பாறையாய் அழுத்த..........
மீளமுடியாதஆழத்தில்
மகிழ்கணங்கள் பிசிரடித்து
சிதைந்து 
கரைந்துபோனபடி................
இருள்வானத்தை
சோகத்துடன் பிரதிபளிக்கிறது
அசைந்து நகரும் நதியும்
தன்னை மறந்து
ஒற்றையாய் பறந்துசெல்லும்
குழுதப்பிய பறவை 
பதட்டத்துடன் பறந்து
கடக்கின்றது ஓலக்குரலுடன்
திசைதிரும்புமிடத்தில்
சற்றேசப்தமிடும் நதிக்குத்தெரியாது
தன்னுள் புதைத்த நினைவுகளின்
மரணஓலம்..............
அ.முத்துவிஜயன்................
— with அகிலா தேவி and 8 others.
Like ·  · 

No comments:

Post a Comment