அறுவடைபற்றிய
அக்கரை இல்லாமலே
விதைப்பைச்செய்கிறாய்
உன் வீரியவிதைப்பை
விழிகளின் கழிவிரக்கமாய்
வெளிப்படுத்தியதை
கண்டும் காணாமலே
மரணாவஸ்தையை
பரிசாகக்கொடுத்த
உன் தலைகொய்யும்
ஆவேசத்தையும்
அலட்சியம் செய்தபடியே
இரவின் கோரமுகத்தை
பரிசாக்கிவிட்டு
கலைந்தும் கலையாத
போதையை
ஆழமாக விதைத்துசெல்கிறாய்
நிலவின் குளுமையையும்
மரமல்லியின் மணத்தையும்
குறுகுறுக்கும்
தென்றலையும்
விளையாடும்
குழந்தையின்
பொம்மையைப்பறிப்பதுபோல்
கதறவிட்டு
பறித்துச்செல்கிறாய்
மரணித்த உயிராக
துடிக்கும் என்மனத்தை
தூரமாகநின்று
குருதிகொட்டும்
பார்வையுடன்
ரசிக்கிறாய்
சாத்தானைபோல்
உன்னைக்கொல்ல
நீளும் என்கரங்கள்
உன் அருகாமை
வந்தவுடன்
அணைக்கவே தொடங்கும்
அவலமும்
அரங்கேறுகிறது...............
காதல் அரக்கனே கொன்றுவிடு
என்னை இரக்கமில்லாமல்.........
அக்கரை இல்லாமலே
விதைப்பைச்செய்கிறாய்
உன் வீரியவிதைப்பை
விழிகளின் கழிவிரக்கமாய்
வெளிப்படுத்தியதை
கண்டும் காணாமலே
மரணாவஸ்தையை
பரிசாகக்கொடுத்த
உன் தலைகொய்யும்
ஆவேசத்தையும்
அலட்சியம் செய்தபடியே
இரவின் கோரமுகத்தை
பரிசாக்கிவிட்டு
கலைந்தும் கலையாத
போதையை
ஆழமாக விதைத்துசெல்கிறாய்
நிலவின் குளுமையையும்
மரமல்லியின் மணத்தையும்
குறுகுறுக்கும்
தென்றலையும்
விளையாடும்
குழந்தையின்
பொம்மையைப்பறிப்பதுபோல்
கதறவிட்டு
பறித்துச்செல்கிறாய்
மரணித்த உயிராக
துடிக்கும் என்மனத்தை
தூரமாகநின்று
குருதிகொட்டும்
பார்வையுடன்
ரசிக்கிறாய்
சாத்தானைபோல்
உன்னைக்கொல்ல
நீளும் என்கரங்கள்
உன் அருகாமை
வந்தவுடன்
அணைக்கவே தொடங்கும்
அவலமும்
அரங்கேறுகிறது...............
காதல் அரக்கனே கொன்றுவிடு
என்னை இரக்கமில்லாமல்.........
No comments:
Post a Comment